மேலும் அறிய

கிருஷ்ணகிரி: ஏரி எங்களது இல்லை என அதிகாரிகள் கைவிரிப்பு - வீணாகும் தண்ணீரால் பொதுமக்கள் கவலை

கெலமங்கலம் அடுத்த சின்னட்டியில் உள்ள ஜம்புகான்கொடைகை ஏரியின் தடுப்பு உடைந்து மழை நீர் வீணாகி வருவதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் 20 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்துள்ள சின்னட்டியில் உள்ள ஜம்புகான்கொடைகை ஏரி சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் சுமார் 100 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளது.

இந்த ஏரிக்கு நீர்வரத்து  மத்திகிரியிலிருந்து மாசிநாயக்கனப்பள்ளி, கொமாரனப்பள்ளி, முகலூர், கூட்டூர் உள்ளிட்ட 72 ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர்  ஜம்புகான்கொடைகை ஏரிக்கு வந்து இங்கிருந்து சனத்துகுமார ஆறு வழியாக தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணைக்கு சென்றடைகிறது. இந்த ஏரியில்  ஆழ்த்துளை கிணறு அமைத்து கெலமங்கலம் பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.  அதே போல்  சுற்றி உள்ள விளை நிலங்கள் மற்றும் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்த இந்த ஏரியிலிருந்து உபரி நீர் செல்லும் தடுப்பு சுவர் உடைந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உடைந்தது.

இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு வரும் மொத்த நீரும் தேக்கி வைக்க முடியாமல் வெளியேறி வீணாகிறது. இதனால் உபரி நீர் வெளியேறும் தடுப்பை  சீரமைக்க வேண்டும் என  கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் அதிகாரிகள்  இந்த ஏரி அரசுக்கு சொந்தம் இல்லை  என  கைவிடப்பட்டாகவும் இதனால்  மாவட்ட ஆட்சியர்  ஆய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர். 

 இது குறித்து விவசாயிகள் கூறும் போது:- கெலமங்கலம்   பேரூராட்சிக்கும்- ஜெக்கேரி ஊராட்சிக்கும் இடையில் ஜம்புகான்கொடைகை ஏரி  உள்ளது. இந்த ஏரிக்கு 72 ஏரிகளிலிருந்து வரும் உபரி நீர் தேக்கி வைத்து விளைநிலங்களுக்கும், குடிநீருக்கும் பயன் உள்ளதாக இருந்தது.

 இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் உபரி நீர் செல்லும் தடுப்பு உடைந்து தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் முற்றிலும் வெளியேறியது. பின்னர் இதனை சீர் செய்யாமல் விட்டதால், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி நிற்காமல் சனத்குமார் ஆற்றில் வீணாக கலக்கிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் இந்த ஏரி எங்களுக்கு சேரவில்லை என கூறிவிட்டனர். இதனால் ஜெக்கேரி ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் இது எங்களுக்கு சேரவில்லை என கூறுகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் அவர்களும் எங்களுக்கு சேரவில்லை என கூறுகின்றனர். இப்படி மாறி மாறி  அதிகாரிகள்  இந்த ஏரியை கைவிட்டதால்,  தற்போது ஏரி தண்ணீரியின்றி பயன் இல்லாமல் வறண்டு உள்ளதால் சிலர் ஏரியை ஆக்கிரமித்துள்ளனர். 

எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஏரி யாருக்கு சொந்தம் என ஆய்வு செய்து உடைந்த தடுப்பை சீரமைத்து தண்ணீரை சேமித்து விவசாய பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கூறினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget