மேலும் அறிய

ஒகேனக்கல் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. பெரும் பரபரப்பு..

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. குடிநீருக்கு பயன்படும் தண்ணீர் என்பதால், யானை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்.

ஒகேனக்கல் அருகே காவிரி ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை : குடிநீருக்கு பயன்படும் தண்ணீர் என்பதால், யானை அப்புறப்படுத்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்


ஒகேனக்கல் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அடித்து வரப்பட்ட யானை.. பெரும் பரபரப்பு..

காவிரி ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை

காவிரி ஆற்றில் ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி அருகே உயிரிழந்த நிலையில் யானை அடித்து வரப்பட்டுள்ளது. இதனை கண்ட மக்கள், ஒகேனக்கல் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வந்த வனத் துறையினர, யானை உடலை மீட்க முயற்சி செய்துள்ளதுள்ளனர்.

அப்பொழுது யானை உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது‌. இதை தொடர்ந்து கர்நாக மாநில வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இறந்த நிலையில் பெண் காட்டு யானை

இதில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள காவிரி கரையோர பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த உயிரிழந்த காட்டு யானையை கர்நாடகா மாநில வனத் துறையினர் பிரேத பரிசோதனை செய்து, வன விலங்குகளின் உணவிற்காக அடக்கம் செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை உடல்

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடகா அணைகளில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 17,000 கன அடியாத திறக்கப்பட்டது‌. அப்பொழுது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால்,  உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானை அடித்து வரப்பட்டது‌. அப்போது பிலிகுண்டுலு வழியாக மிதந்து வந்து தற்போது ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் நடு ஆற்றில் உள்ளது. 

தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது

மேலும் உயிரிழந்த காட்டு யானைக்கு பிரேத பரிசோதனை செய்து இருப்பதால் உடல் பாகங்கள் தண்ணீரில் கலந்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரில் மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட தண்ணீர்  பருகுவதால், உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது

இதனால் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பருகும் மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட  காலங்களில் ஆற்று நீர் கலங்கள் காரணமாக பலருக்கு உடல் உபாதைகள், வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது இந்த உயிரிழந்த யானை ஆற்றில் அடித்து வரப்பட்டதன் காரணமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர்ரை நம்பியுள்ள இரண்டு மாவட்ட மக்கள் மீண்டும் உடல் உபாதைகளுக்கு ஆளாக வாய்ப்புள்ளது.

கர்நாடக வனத்துறையினர் செய்த செயலால் இரண்டு மாவட்ட மக்கள் பாதிப்பு

மேலும் கர்நாடகா வனத் துறையினர் உயிரிழந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட யானையை அப்புறப்படுத்தி வனப் பகுதியிலேயே அடக்கம் செய்து இருந்தால், இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

 மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப்பகுதியிலேயே அடக்கம் 

தொடர்ந்து கர்நாடக வனத் துறையினர் ஆற்றில் மிதந்து கிடக்கும் யானையை மீட்டு கர்நாடக வனப் பகுதியிலேயே அடக்கம் செய்ய உள்ளதாக, தமிழக வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் குடிநீருக்கு பயன்படுத்தப்படுவதால், ஆற்றிலிருந்து யானையின் உடலை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உயிரிழந்து, பிரேத பரிசோதனை செய்த யானை உடல் காவிரி ஆற்றில் மிதந்து கிடப்பதால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மூலம் குடிநீர் அருந்தும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Hosur Airport: ”நீங்க கேட்டா கொடுக்கணுமா” தமிழக அரசின் முக்கிய கோரிக்கை நிராகரிப்பு - மத்திய அரசின் காரணம்
Embed widget