மேலும் அறிய

தர்மபுரி: குறைதீர்நாள் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் எழுப்பிய கேள்வி - ஆட்சியர் அளித்த உறுதி

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மூன்று மாதத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். இதில் விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ் ஏ. சின்னசாமி பேசியதாவது:-

 பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த நாலு மாதமாக கரும்பு விவசாயிகளுக்கு 2.50 கோடி நிலுவை தொகை வழங்கவில்லை. அதனை உடனடியாக வழங்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு 3000 வழங்கப்படுகிறது. இது கட்டுப்படியாவதில்லை வெட்டு கூலி, இடுபொருட்கள் விலை ஏற்றம் காரணமாக விவசாயிகள் கரும்பு நடவு செய்வதற்கு தயங்குகின்றனர். 

 கரும்பு விவசாயிகளை ஊக்கப்படுத்த கரும்பு வெட்டும் கூலியை அரசு மானியமாக வழங்க வேண்டும்.  பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 6 லட்சம் டன் கரும்பும் பாப்பிரெட்டிப்பட்டி, கோபாலபுரம், கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 4.50 லட்சம் டன் கரும்பும் அரவை செய்ய கொள்ளளவு கொண்டது. 

 ஆனால் கரும்பு சாகுபடி பரப்பு பாதியாக குறைந்ததால் ஆலையில் அரவை திறன் குறைந்துள்ளது  இவ்வாறு அவர் பேசினார்.


 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்க மாவட்ட செயலாளர் எஸ். சின்னசாமி பேசுகையில்:-

 ஒகேனக்கல் உபரித்திட்டம் நிறைவேற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கால்நடைகள் தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது இதனால் பால் விலையை உயர்த்தி வழங்கிட வேண்டும். கால்நடை தீவனங்களின் விலை உயர்ந்துள்ளது இதனால் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் ஆத்துக்கொட்டாய், மாமரத்து பள்ளம் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார். 

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் பிரதாபன் பேசுகையில்:-

 மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக 251 பஞ்சாயத்திலும் 100 நாள் வேலை வழங்கவில்லை. தகுதியுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் நல்லம்பள்ளி ஒன்றியம் பாகல்பட்டி அருகே பச்சையப்பன் கொட்டாய் முதல் பட்டாக பட்டி வரை விவசாய நிலத்தில் கனிமம் இருப்பதாக ஒன்றிய அரசின் சார்பில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 விவசாய நிலத்தை இழக்க நாங்கள் தயாராக இல்லை எனவே கனிம ஆய்வை அரசு கைவிட வேண்டும் என்றார்.

 விவசாயிகளின் கேள்விக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி பேசியதாவது:-  
 
உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கரும்பு நிலுவைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு வெட்டும் கூலி அரசு பார்வைக்கு கொண்டு செல்லப்படும். 

ஒகேனக்கல் உபநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது. மாவட்டத்தில் 2024 -2025 ஆம் ஆண்டிற்கு 1.72. 280 ஹெக்டர் பரப்பளவில் நெல் சிறுதானியங்கள் பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானியங்கள் பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பருத்தி, கரும்பு சாகுபடி பரபரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 இதில் தற்போது வரை ஏழு 7. 654 ஹெக்டர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் உற்பத்தியும் வருமானத்தையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வேளாண்மை துறை அலுவலர்கள் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
 இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்

தலைப்பு செய்திகள்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ரூ.2.02 கோடியில் விரிவாக்கம்: தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!
மனைவி, மகளை கொன்று தற்கொலை; இறப்பதற்கு முன் தொழிலதிபர் வெளியிட்ட கடைசி வீடியோ!
மனைவி, மகளை கொன்று தற்கொலை; இறப்பதற்கு முன் தொழிலதிபர் வெளியிட்ட கடைசி வீடியோ!
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு சொட்டு நீர் கூட கிடைக்காது! - விழிப்புணர்வு பயணத்தைத் தொடங்கினார் அன்புமணி !
மேகதாதுவில் அணை வந்தால் தமிழகத்திற்கு சாக்கடை நீரும் கிடைக்காது! - அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை!
மேகதாதுவில் அணை வந்தால் தமிழகத்திற்கு சாக்கடை நீரும் கிடைக்காது! - அன்புமணி ராமதாஸ் அதிரடி எச்சரிக்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Revolt RVX: ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
ஒரு சார்ஜில் 160 கிமீ பயணம்; அதிவேக சார்ஜிங்; நவீன அம்சங்கள்; அசர வைக்கும் ரிவோல்ட் RVX; விலை என்ன.?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
New Renault Kwid: ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
ஆல்டோ K10, எஸ்-பிரஸ்ஸோ-க்கு கிளம்பிய பீதி; CNG ஆப்ஷனுடன் மாஸ் காட்டும் ரெனால்ட் க்விட்; செம போட்டி.!
Embed widget