மேலும் அறிய

விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்! ஒரே நாளில் பயிர் கடன் ; உடனே விண்ணப்பியுங்கள்

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்திற்கு, அரசு 'இ - சேவை' மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

தர்மபுரியில் துவக்கப்பட்ட, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் வழங்கும் திட்டத்திற்கு, அரசு 'இ - சேவை' மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயிர் கடன்

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், 4,473 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கடன்கள் வழங்கப்படுகின்றது. ஆனால், குறித்த காலத்தில் கடன் கிடைப்பதில்லை என்ற புகார் உள்ளது. எனவே, பயிர் கடனுக்கு விண்ணப்பித்த அன்றே, விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் தொகையை செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த, கூட்டுறவு துறை முடிவு செய்தது.

ஒரே நாளில் பயிர் கடன் வழங்கும் திட்டம்

இத்திட்டத்தை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில், முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர், அரசு இ - சேவை மையத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு, 'ஆதார்' கட்டாயம்.

இ-சேவை மையம் சென்றால் உடனடி பயிர் கடன் 

இ - சேவை மைய ஊழியர்கள், சங்கங்களின் பயிர் கடனுக்கான இணையதளத்தில் விண்ணப்பம் செய்யும் போது, சங்க அதிகாரிகள், 'டி.என்.கிரெய்ன்ஸ், தமிழ் நிலம்' இணையதளங்களில் இருந்து விவசாயிகளின் ஆவணங்களை பரிசீலித்து, அன்றே வங்கி கணக்கில் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பர்.

அரசு, இ - சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வருமான சான்று என, பல்வேறு சான்றுகள் வழங்கப்படுகின்றன. பல விவசாயிகளுக்கு கணினி இயக்கத் தெரியாது. அவர்கள், மற்றவர்கள் உதவியுடன் பயிர் கடனுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது, சரியாக பூர்த்தி செய்யப்படாத பட்சத்திலும், கடன் கிடைக்கவில்லை என்று கூறுவர். இதை தவிர்க்கவே அரசு இ - சேவை மையத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் கொள்கை முடிவின்படி, எந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியையும் பணம் பெருக்கும் நோக்கத்துடன் செயல்படாமல், இவை விவசாயிகளின் நன்மைக்காக குறிப்பிட்ட தேவைக்காக செயல்படும் பகுதிகளில் சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இந்த அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை முக்கியமான அச்சாணியாகக் கருதி, இதன் மீது ஒருங்கிணைந்த தேவைகளான கடன், காப்பீடு, இடுபொருள் சந்தைப்படுத்துதல் மற்றும் விரிவாக்க செயல்பாடுகளை விவசாயிகளுக்கு வழங்க முடிகிறது. விவசாயத் துறயைில் உற்பத்தித் திறனை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை அறிந்து, 11 வது ஐந்தாண்டுத் திட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த சேவைகள் தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள் வழங்குவதிலும் முக்கியப் பங்கு வகுக்கின்றது. விவசாயிகளின் செழிப்புகளை அதிகரிப்பது மற்றும் சரியான சேவைகளைப் பெற்று தொழில்நுட்ப தலையீடுகளுடன் மேம்படுத்த முனைந்துள்ளது. இந்த முறையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் விவசாயத் துறை, ஆராய்ச்சி மற்றும் சேவைகளை ஒரு குடையின் கீழ் வழங்குகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் நெல் கொள்முதல் நிலையங்களாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்காக செயல்பட்டு நெல் கொள்முதலை குறைந்தபட்ச ஆதரவு விலையில் அரசு அறிவித்த தொகையில் டெல்டா இல்லாத பகுதிகளில் செயல்படுகிறது. இது தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலம் இயக்கும் நேரடி கொள்முதல் நிலையங்கள் சேர்க்காமல் தனித்து இயங்குகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை மற்றும் இந்திய தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு (NAFED) ஆகியவற்றின் மூலம் விவசாயப் பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதற்கு உதவுகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி விளைபொருட்கள் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் மீது கடன் வழங்குவதை விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டத்தை விளைச்சல் அதிகமாக இருக்கும் காலங்களில் தவிர்ப்பதற்காக பயிர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
A Raja Slams CM Vijay: “Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
“Bro, பிரதமர் முன்னாடி உங்க சக்தி எங்க போச்சு Bro.?“- முதல்வர் விஜய்யை கேள்விகளால் துளைத்த ஆ. ராசா
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Edappadi Palanisamy: “நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
“நயவஞ்சக துரோகத்தை வீழ்த்துவோம்.! யாரும் அச்சப்பட வேண்டாம்“ - தொண்டர்களுக்கு பூஸ்ட் கொடுத்த இபிஎஸ்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
Embed widget