மேலும் அறிய

ABP Nadu Impact: ஏபிபி நாடு செய்தி எதிரொலி; சாய்ந்த வாழை மரங்கள்; தோட்டக் கலை துறை கணக்கெடுப்பு - விரைவில் நிவாரணம்

ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக அரூர் கோட்டத்தில் வறட்சி மற்றும் கனமழை சூறைக் காற்றால் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்கள். 31 ஹெக்டேர் சாய்ந்ததாக தோட்டக் கலை துறை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனது. இதனால் மாவட்ட முழுவதும் கடந்த ஐந்து மாதமாக கடுமையான வறட்சி ஏற்பட்டது. மேலும் கோடை வெப்பம் அதிகமாக வீசியதால் நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்றது. இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த பயிர்கள், தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வந்தது. இந்நிலையில் அரூர் கோட்டத்தில் கடந்த வாரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கடத்தூர், தாளநத்தம், புட்ரெட்டிப்பட்டி, துரிஞ்சிப்பட்டி, இராமியனஹள்ளி, தென்கரைக்கோட்டை, பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடாசமுத்திரம், மோளையானூர், மெணசி, அ.பள்ளிப்பட்டி, எருமியாம்பட்டி, பறையப்பட்டிபுதூர், அரூர், கீரைப்பட்டி, கொளகம்பட்டி உள்ளிட்ட பகுதியில்  உள்ள பல்வேறு இடங்களில் வாழைத் தோட்டங்கள், பாக்கு,தென்னை உள்ளிட்டவைகள் சேதமடைந்தது.

இந்நிலையில் வறட்சியால் தண்ணீர் இன்றி, குழை அறுவடைக்கு வரும் நேரத்தில், வாழை மரங்கள் பாதியில் உடைந்து விழுந்து, காய்ந்து கருகியது. மேலும் கனமழையின் போது சூறைக் காற்று வீசியது. இந்த மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குறித்து, தோட்டக்கலைத் துறை முறையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கைகள் விடுத்தனர்.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம், அரூர்  கோட்டத்திற்குட்பட்ட அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர், கடத்தூர், பொம்மிடி வட்டாரங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் தோட்டக் கலைத்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கடந்த  வாரத்தில் ஈடுபட்டனர். இதில் அரூர் வட்டாரத்தில் மழையால் 13 ஹெக்டேரும், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் 8 ஹெக்டேரும், மொரப்பூர் வட்டாரத்தில் 10 ஹெக்டேரும்  வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத் துறை கணக்கெடுப்பில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கைகள் தயார் செய்யப்பட்டு, தோட்டக் கலைத் துறை சார்பில்  மாவட்ட ஆட்சியர் மூலம் மாநில அரசுக்கு அனுப்பப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு தலா ரூ. 17 ஆயிரம் வீதம், பேரிடர் மேலாண்மை நிதி அரசிடமிருந்து பெறப்பட்டு  தோட்டக் கலைத் துறை மூலம் வழங்கப்படவுள்ளது. அதேப்போல் சூறைக்காற்று மழையால் தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்கள் பரவலாக பாதிக்கப்பட்டிருந்தாலும், மொத்த மரங்களின் எண்ணிக்கையில் 33 சதவீதத்திற்கு குறைவான அளவு பாதிப்பே இருப்பதால், பேரிடரில் கணக்கில் வராது. அதனால் அவைகளுக்கான கணக்கீடு நடக்கவில்லை என தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget