மேலும் அறிய

நீலகிரி: ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

“முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை"

நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு - கர்நாடகா எல்லைப் பகுதியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து உயிரிழந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு பகுதியில் சுற்றி திரிந்த 20-க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனைத் தொடர்ந்து உயிரிழப்பிற்கான காரணம் என்ன என்பதை அறிய, உயிரிழந்த காட்டுப் பன்றிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வனத்துறையினர் ஆய்வுக்கு அனுப்பினர். 

இந்நிலையில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் காரணமாக காட்டுப் பன்றிகள் உயிரிழந்து இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில், வனத்துறை அதிகாரிகள் தெப்பக்காடு மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதியில் காட்டுப்பன்றி உயிரிழந்துள்ளதா என சோதனை மேற்கொண்டனர். இதில் 26 காட்டுப் பன்றிகள் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து உயிரிழந்த பன்றிகளின் உடல்கள் அங்கேயே தீயிட்டு எரிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் உள்ள பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பரவலை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்பு பன்றிகளை விற்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


நீலகிரி: ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

காட்டுப் பன்றிகள் உயிரிழப்பு குறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் வெங்கடேஷ் கூறுகையில்,  “முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு பன்றிகளுக்கு பரவி வருவது ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கோ, மற்ற வன விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை என்பதால், பொதுமக்கள் அச்சபட தேவையில்லை. வனப் பணியாளர்கள் குழுக்களாக சென்று வனப்பகுதியில் உள்ள புதர்களில் காட்டுப் பன்றிகள் உயிரிழந்துள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.
தெப்பக்காடு பகுதியில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளதால் அதற்குள் காட்டுப் பன்றிகள் வராமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதுமலை வனப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் வளர்ப்பு பன்றிகள் இல்லாததால், அது மற்ற இடங்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், ”கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் உள்ள வளர்ப்பு பன்றி பண்ணைகளை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளது. மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்களில் இந்த வைரஸ் பரவி வரும் நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் குறித்து மத்திய கால்நடை பராமரிப்புத் துறை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடக்க உள்ளது” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget