மேலும் அறிய

OPERATION T 23 : டி 23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்களும், சவால்களும் என்னென்ன?

’’எம்.டி.டி23 புலியை பார்த்தாலுமே உடனே மயக்க மருந்தை செலுத்த முடியாது. இங்கே ஒரே சரகத்திற்குள் 4 அல்லது 5 புலிகள் இருப்பதால், அது இந்த எம்டிடி23 புலி தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்’’

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில் ஏற்பட்டுள்ள‌ காயத்துடன் காட்டை விட்டு வெளியேறிய அந்த புலி, தேயிலைத் தோட்டங்களில் நடமாடி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபர் புலி தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து சிங்காரா பகுதிக்கு புலி இடம் பெயர்ந்த நிலையில், குறும்பர் பாடி என்ற இடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்று, உடல் பாகங்களையும் சாப்பிட்டது.

புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், புலியை பிடிக்கக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக கூறும் உள்ளூர் மக்கள், புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனிடையே சுட்டுக் கொல்லக் கொள்ளாமல் உயிருடன் பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


OPERATION T 23 : டி 23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்களும், சவால்களும் என்னென்ன?

புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர். புலியை பிடிக்கும் பணியில் இன்று 12 வது வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புலியைத் தேடும் பணியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில வனத்துறையினர், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோரும் புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புலி தேடுதல் வேட்டையில் 2 கும்கி யானைகள், 3 மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டன. 3 ட்ரோன்கள் மற்றும் அதி நவீன கேமராக்கள் மூலம் புலி இருப்பிடத்தை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


OPERATION T 23 : டி 23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்களும், சவால்களும் என்னென்ன?

டி 23 புலியை பிடிப்பதில் வனத்துறையினருக்கு பல்வேறு சவால்களும், சிக்கல்களும் உள்ளன. இதன் காரணமாக புலியை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து கோயம்புத்தூர் வனவிலங்குகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் நிறுவனர் முருகானந்தம் கூறும் போது, ”எம்.டி.டி23 புலியை பிடிப்பது உண்மையில் ஒரு சவாலான விஷயம். தேவன் எஸ்டேட்டில் இருந்த அந்த புலி அங்கிருந்து பயணித்து தற்போது முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு வந்துள்ளது. முதுமலை சரணாலயம் புலிகள் மறைந்து வாழும் அளவிற்கு புதர்மண்டி காணப்படும் சரணாலயம் ஆகும். புலிகள் மனிதனின் கண்ணுக்கு அகப்படாமல், எந்தளவிற்கு மறைந்து வாழ முடியுமோ அந்தளவிற்கு புதர்களில் வாழும். முதுமலை சரணாலயம் அந்த புலிக்கு சாதகமாக உள்ளது. மற்ற புலிகளும் இந்த பகுதியில் உள்ளது. இதன் காரணமாக எம்.டி.டி.23 புலியை கண்டறிவதில் சவால்களும், சிக்கல்களும் உள்ளன.


OPERATION T 23 : டி 23 புலியை பிடிப்பதில் உள்ள சிக்கல்களும், சவால்களும் என்னென்ன?

எம்.டி.டி23 புலியை பார்த்தாலுமே உடனே மயக்க மருந்தை செலுத்த முடியாது. இங்கே ஒரே சரகத்திற்குள் 4 அல்லது 5 புலிகள் இருப்பதால், அது இந்த எம்டிடி23 புலி தானா என்பதை உறுதி செய்ய வேண்டும்.  அதன் பிறகே மயக்க மருந்து செலுத்த முடியும். புலியின் கால்தடம் கிடைத்தால் அது எம்டிடி23 புலியின் கால்தடம் என்பதுதானா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதற்கு நேரம் எடுப்பதால் புலியை பின்தொடர்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. மழை தொடர்ந்து பெய்வதால் தேடுதல் வேட்டை சிரமமாக உள்ளது. அந்த புலி அடிக்கடி இடம் மாறி வருகிறது. வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் எம்.டி.டி.23 புலி பிடுபடும்” என அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

பிக்கப் வேன் மீது பாய்ந்த பொலிரோ கார்... டாஸ்மாக் முன் நொடியில் நடந்த பயங்கரம்...
பிக்கப் வேன் மீது பாய்ந்த பொலிரோ கார்... டாஸ்மாக் முன் நொடியில் நடந்த பயங்கரம்...
கோடை வெயிலுக்கு பிரேக் போட்ட சாரல் மழை... காலையிலேயே குஷியான கோவையன்ஸ்
கோடை வெயிலுக்கு பிரேக் போட்ட சாரல் மழை... காலையிலேயே குஷியான கோவையன்ஸ்
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
மதுக்கரையில் செயின் பறிப்பு வழக்கு: தனிப்படை விசாரணையில் சிக்கிய குற்றவாளி
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...
5 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு... பெண்ணை வன்புணர்ச்சி செய்த நபருக்கு 10 ஆண்டு ஜெயில்...

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
TN Assembly: 5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
5 வருடங்களுக்கான வெற்றி தமிழகம் விஷன்..! 10 முக்கிய தூண்கள் - சிஎம் விஜயின் ப்ளான் வெளியீடு
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
8th Commission: அப்படிப்போடு.. மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜாக்பாட்.. உயரும் ஊதியம்!
Embed widget