“2026ல் விஜய் ஆட்சி உறுதி" - கோவையில் செங்கோட்டையன் அதிரடி பேச்சு...
சட்டமன்ற தேர்தலில் 9 முறை வெற்றி பெற்றுள்ள தான், தற்போது மீண்டும் கோபி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன் என கோவையில் செங்கோட்டையன் பேட்டி.

தமிழ்கத்தில் “2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மக்களின் முழு ஆதரவோடு விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகம் முழுக்க விஜய் அலை
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நல்லாட்சி மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கும் திறன் தமிழக வெற்றிக் கழகத்துக்கே உள்ளது என்றும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாக அது அமையும் என்றும் கூறினார். நீண்ட காலமாக ஆட்சி செய்து வருபவர்களை விட புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். சட்டமன்ற தேர்தலில் 9 முறை வெற்றி பெற்றுள்ள தான், தற்போது மீண்டும் கோபி தொகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளராக களம் இறங்கியுள்ளேன் என தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகத்தில் இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் உள்ளிட்ட பலரின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், இது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்த கருத்துகள் குறித்து பேசிய செங்கோட்டையன், காலம் மாறும்; மக்கள் தீர்ப்பால் அவை அனைத்தும் முறியடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















