மேலும் அறிய

தமிழ்நாட்டிற்குள் பாஜகவால் எப்போதும் நுழைய முடியாது - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்குள் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

கோவை கொடிசியா மைதானத்தில் திமுக இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கோவையில் தான் முதல் திராவிட இயக்க தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இங்கு கலைஞர் கால்படாத இடமே இல்லை. தமிழகத்தின் முதல் வேளாண்மை பல்கலை கழகம், டைடல் பார்க், சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். கோவையில் நடைபெறும் இந்த செயல்வீரர்கள் கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. சேலம் மாநாட்டு நிதியாக கோவை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக ரூ.3.37 கோடி வழங்கியுள்ளனர். தமிழகத்திலேயே அதிக மாநாட்டு நிதியை கோவை மாவட்டம் வழங்கியுள்ளது. மாவட்ட கழக நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


தமிழ்நாட்டிற்குள் பாஜகவால் எப்போதும் நுழைய முடியாது - உதயநிதி ஸ்டாலின்

மாநாட்டு அழைப்பு கூட்டம் மினி மாநாடு போல உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக 1980 ல் இளைஞர் அணி என தனியாக அணி திமுகவில் தான் துவங்கப்பட்டது. தேர்தல் முன்பு அரசியல் இயக்கங்கள் எழுச்சியை காட்ட மாநாடுகள் நடத்துவார்கள். அதை இயக்கங்களே நேரடியாக நடத்தும் எந்த அணிக்கும் கிடைக்காது. ஆனால் நமது தலைவர் தேர்தலுக்கு முன் முதல் மாநாட்டை நடத்த இளைஞர் அணிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், அது இளைஞர்கள் மீது தலைவர் வைத்துள்ள நம்பிக்கை. அதை நாம் காப்பாற்ற வேண்டும்.   மூன்று மாதத்திற்கு முன்பு மதுரையில் ஒரு மாநாடு நடந்தது. அது எதற்கு நடந்தது என யாருக்கும் தெரியாது. இயக்க வரலாறு, கொள்கை, தலைவர்கள் பற்றி பேசினார்களா? கேலிக்கூத்தான மாநாட்டை நடத்தினார்கள். ஆனால் திமுக இளைஞர் அணி சேலம் மாநாடு இந்தியாவிலேயே எப்படி ஒரு மாநாடு நடத்த வேண்டும் என்பதை போல நடத்தி காட்ட வேண்டும்.  

கடந்த 3 வருடங்களில் தலைவர் கொண்டு வந்த முக்கியமான நான்கு திட்டம், முதலில் கட்டணமில்லா பேருந்து, பெண் கல்வி மேம்பட புதுமை பெண் திட்டம், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான காலை உணவு திட்டத்தால் 31ஆயிரம் பள்ளிகளில் 17 லட்சம் குழந்தைகள் பயன் பெறறு வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தினால் 1.18 கோடி மகளிர்கள் பயன்பெறுகிறார்கள். இத்திட்டங்களை மக்கள் மத்தியில் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும். தமிழகத்தில் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. அடிமை அதிமுகவினர் பாஜக வற்புறுத்தல் காரணமாக நீட்டை தமிழகத்தில் நுழைய விட்டனர். நீட் தேர்வு தடை செய்ய, நீக்க கோரி இது வரை 60 லட்சம் பேர் கையெழுத்துப் பெற்றுள்ளோம்.


தமிழ்நாட்டிற்குள் பாஜகவால் எப்போதும் நுழைய முடியாது - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டில் இருந்து கடந்த 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி ரூபாய் வரியாக ஒன்றிய அரசு பெற்று உள்ளது. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கொடுத்தது வெரும் 2 லட்சம் கோடி தான். ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்திற்கு 9 லட்சம் கோடியை கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி கடந்த வாரம்  மத்தியபிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தில் என்னை பற்றி பேசியுள்ளார். அவருக்கு எப்போதும் என்னுடைய நினைப்பு தான். பிறப்பால் அனைவரும் சமம் என்று தான் பேசினேன், ஆனால் இனப்படுகொலை தூண்டினேன் என பிரச்சாரம் செய்கின்றனர். மேலும் திமுக ஆட்சியல் கலைஞர் குடும்பம் தான் வாழ்கிறது என்கிறார். ஆமாம் தமிழகத்தில் நாங்கள் அனைவரும் கலைஞர் குடும்பம் தான், நான் மட்டும் அல்ல அனைவரும் கலைஞர் பேரன்கள், வாரிசுகள் தான்.

சிஏஜி அறிக்கை என்ன சொல்கிறது. 9 ஆண்டுகள் பாஜக அரசிடம் 7.5 லட்சம் கோடிக்கு கணக்கு இல்லை. 1 கிலோ மீட்டர் சாலைக்கு 250 கோடி செலவு கணக்கு. ரமணா பட பாணியில் இறந்த போன  88  ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு கொடுத்துள்ளது பாஜக அரசு. ஊழல் ஆட்சியை பாஜக அரசு நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிற்குள் எப்போதும் பாஜக நுழைய முடியாது என்பதற்கான முன்னோட்டமாக திமுக இளைஞர் அணி மாநாடு நடைபெற உள்ளது. வருகின்ற 2024 தேர்தலில் நீங்கள் எல்லாம் பாஜகவை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட முன் வரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget