மேலும் அறிய

வால்பாறையில் நிலச்சரிவில் இடிந்து விழுந்த வீடு - இரண்டு பெண்கள் உயிரிழந்த சோகம்!

நள்ளிரவில் வீடு இடிந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை, அவ்வப்போது பெய்து வருகிறது. தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் விட்டு விட்டு கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

வீடு இடிந்து விபத்து

குறிப்பாக கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியது முதல், வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று முதல் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே வால்பாறையில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இடைவிடாமல் தொடர் கன மழை பெய்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக மழை அளவு சற்று குறைந்திருந்த போதும், தொடர்ந்து இடைவிடாமல் மழை பெய்து வந்தது. இதனால் ஆங்காங்கே லேசான நிலச்சரிவுகள் ஏற்பட்டு வந்தது. நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகே இருக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் வசிக்குமாறு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் சோலையாறு அணை அமைந்துள்ள பன்னிமேடு இடது கரை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த போது ராஜேஸ்வரி என்பவரது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது வீட்டிற்குள் ராஜேஸ்வரி மற்றும் அவரது 14 வயது பேட்டி ஜனனி பிரியா ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்ப காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் வீடு இடிந்து இருவரும் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ரூ.5000 அபராதம், திணறும் தலைநகரம், கோரிக்கையை கைவிட்ட உக்ரைன் - 11 மணி வரை இன்று
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
Tata Sierra: டாடா சியாரா.. ஒவ்வொரு வேரியண்டிற்கான இன்ஜின் ஆப்ஷனும், விலையும் - புக்கிங் தொடங்கியாச்சு..!
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget