மேலும் அறிய

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

’’இந்த ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் 100 மீட்டர் தூரத்தில் இருந்து கூட சிக்னலை இயக்க முடியும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்’’

கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, மருதமலை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக, கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் வாகனங்கள் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க கோவை மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

சாலைகளில் உள்ள சிக்னல்களை காவலர்கள் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவலர்கள் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் சாலையில் கூடுதலாக தேவையான நேர அவகாசம் கொடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னல்களை எளிதாக கடந்து செல்லும் வகையில், அவ்வாகனங்கள் வரும் போது சிக்னல்களை திறந்து விட உதவிகரமாக இருந்து வருகிறது.

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

அதேசமயம் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத சமயத்தில் டைமர் முறையில் சிக்னல்கள் இயக்கி வருகின்றன. போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை நிழற்குடையில் அமர்ந்து இயக்குவதால், சிலர் சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதி மீறல்கள் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து இறங்கி வந்து விதிமுறைகளை தடுக்க முடியாததால் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர். இதையடுத்து சோதனை முயற்சியாக சிக்னல்களை போக்குவரத்து காவலர்கள் சாலையில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் கூறுகையில், முதற்கட்டமாக சோதனை முறையில் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் ரிமோட் மூலம் சிக்னல்களை இயக்குவார் எனவும், நிழற்குடையில்  அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்தை நெரிசலை கட்டுபடுத்துவதுடன் விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க முடியும் எனவும், இந்த சென்சார் மூலம் சிக்னல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் எனவும் அவர் கூறினார். அடுத்த கட்ட சோதனை முயற்சியாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
"உனக்கு அழிவு ஆரம்பம்” - போகிக்கு விஜய் டி-ஷர்டை எரித்த வைஷ்ணவி.. கொந்தளித்த தவெக படை!
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Embed widget