மேலும் அறிய

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

’’இந்த ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் 100 மீட்டர் தூரத்தில் இருந்து கூட சிக்னலை இயக்க முடியும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும்’’

கோவை மாநகரில் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி சாலை, மருதமலை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 52 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்கள் காரணமாக, கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக முக்கிய சாலைகளில் உள்ள சிக்னல்களில் வாகனங்கள் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகளுக்கு நேர விரயம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்க்க கோவை மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.


கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

சாலைகளில் உள்ள சிக்னல்களை காவலர்கள் அமர்ந்து இயக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காவலர்கள் சிக்னல்களை தன்னிச்சையாக இயக்கும் திட்டம் அமலுக்கு வந்தது. இதனால் அதிக வாகனங்கள் தேங்கி நிற்கும் சாலையில் கூடுதலாக தேவையான நேர அவகாசம் கொடுத்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்னல்களை எளிதாக கடந்து செல்லும் வகையில், அவ்வாகனங்கள் வரும் போது சிக்னல்களை திறந்து விட உதவிகரமாக இருந்து வருகிறது.

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

அதேசமயம் போக்குவரத்து காவலர்கள் பணியில் இல்லாத சமயத்தில் டைமர் முறையில் சிக்னல்கள் இயக்கி வருகின்றன. போக்குவரத்து காவலர்கள் சிக்னல்களை நிழற்குடையில் அமர்ந்து இயக்குவதால், சிலர் சிக்னலை மதிக்காமல் செல்வதும் அதிக வேகமாக வாகனத்தை இயக்குவது போன்ற விதி மீறல்கள் நடைபெறுகிறது. இதனால் போக்குவரத்து காவலர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து இறங்கி வந்து விதிமுறைகளை தடுக்க முடியாததால் வாகன ஓட்டிகள் தப்பி விடுகின்றனர். இதையடுத்து சோதனை முயற்சியாக சிக்னல்களை போக்குவரத்து காவலர்கள் சாலையில் நடந்து கொண்டே ரிமோட் மூலம் இயக்கும் வகையிலான திட்டம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் ரிமோர்ட் கண்ட்ரோல் மூலம் போக்குவரத்து சிக்னலை கட்டுப்படுத்தும் நடைமுறை அறிமுகம்...!

இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையாளர் செந்தில்குமார் கூறுகையில், முதற்கட்டமாக சோதனை முறையில் டெக்ஸ்டூல் மேம்பாலம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் ரிமோட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். போக்குவரத்து காவலர் ரிமோட் மூலம் சிக்னல்களை இயக்குவார் எனவும், நிழற்குடையில்  அமராமல் சாலையில் நடந்தபடி போக்குவரத்தை நெரிசலை கட்டுபடுத்துவதுடன் விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். சாலை விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகளை பிடிக்க முடியும் எனவும், இந்த சென்சார் மூலம் சிக்னல் இருந்து 100 மீட்டர் தூரம் வரை இயக்க முடியும் எனவும் அவர் கூறினார். அடுத்த கட்ட சோதனை முயற்சியாக லாலி ரோடு சந்திப்பில் உள்ள சிக்னலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், இந்த சோதனை முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மாநகர் முழுவதும் இத்திட்டம் விரிவு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget