மேலும் அறிய

கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது

சாலை ஓர வியாபாரியாக உள்ள சங்கீதா என்ற பெண்ணிடம் முதலில் குழந்தையை பணத்திற்காக கேட்டுள்ளனர். கொடுக்க மறுத்ததால் குழந்தையை கடத்திச் சென்றுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - சங்கீதா  தம்பதியினர். இவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் சாலை ஓரத்தில் பொருட்கள் வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்களது 5 மாத குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.  இது குறித்து ஆனைமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். வால்பாறை டி.எஸ்.பி சீனிவாசன் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கொண்டு மேற்கொண்டனர்.


கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது

அதனடிப்படையில் ஆனைமலையை சேர்ந்த ராமர் (49), முருகேசன் (39) ஆகிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையை பணத்திற்காக கடத்தியது தெரியவந்தது. மேலும் அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கு குழந்தை இல்லாததால் பணத்திற்காக குழந்தையை கடத்தி விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துச்சாமியையும் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக பிடித்து குழந்தையை மீட்ட காவலர்களுக்கு கோவை சரக டி.ஐ.ஜி முத்துச்சாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.


கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது

பின்னர் செய்தியாளர்களுக்கு டிஐஜி முத்துசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பேட்டியளித்தனர். அப்போது பேசிய அவர்கள், "கோவை மாவட்டத்தில் இதுவரை பணத்திற்காக குழந்தை கடத்தல் நடைபெற்றதில்லை. முதல்முறையாக  5 மாத குழந்தை பணத்திற்காக கடத்தப்பட்டுள்ளது.  ஆனைமலையில் சாலை ஓர வியாபாரியாக உள்ள சங்கீதா என்ற பெண்ணிடம் முதலில் குழந்தையை பணத்திற்காக கேட்டுள்ளனர். ஆனால் அவர் குழந்தையை கொடுக்க மறுத்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணிடம் குழந்தைக்கு  சில்லி சிக்கன் வாங்கி கொடுக்குமாறு 50 ரூபாய் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு, குழந்தையை கடத்தி உள்ளனர்.


கோவை | விற்க மறுத்த தாயிடமிருந்து 3 மாத பெண்குழந்தை கடத்தல்.. மூவர் கைது

 குழந்தையை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 20 கிலோ மீட்டர் தூரம் சிசிடிவி கேமரா பதிவு சோதனை செய்யப்பட்டது. ஆனைமலையை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கு 20 ஆண்டுகளாக  குழந்தை இல்லாததால், ராமர், முருகேசன் ஆகியோர் குழந்தையை கடத்தி விற்பனை செய்துள்ளனர். இதற்காக முதல் கட்டமாக ரூ.50  ஆயிரமும், குழந்தையை பெற்று கொண்டு ரூ.40 ஆயிரமும் பணத்தை பெற்றுள்ளனர். கடத்தப்பட்ட குழந்தை முத்துப்பாண்டி வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. குழந்தை கடத்தலில் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுவார்கள். ஏழ்மையில் இருந்தும், அதிகமாக பணம் கொடுத்தும் குழந்தையை கொடுக்காமல் இருந்த குழந்தையின் தாயை பாராட்டுகிறோம்” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
Breaking News LIVE, June 5: ஹத்ராஸில் ராகுல்காந்தி: பாதிக்கப்பட்டோருக்கு நேரில் ஆறுதல்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
HBD Mumtaj : அல்லாஹ்விடம் சரணடைந்து விட்டேன்! கிளாமர் நடிகை டூ ஆன்மீகவாதி... மும்தாஜ் கடந்து வந்த பாதை...
Embed widget