மேலும் அறிய

Crime: மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் ஆத்திரம்: வாலிபரை கூலிப்படை வைத்து படுகொலை செய்த தந்தை!

புவனேஸ்வரன் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து ஆபாசமாக செல்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் புவனேஸ்வரன். 25 வயதான இவர், திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு திருப்பூரை சேர்ந்த 14 வயதான பள்ளி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதையடுத்து புவனேஸ்வரன் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றதுடன், சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து ஆபாசமாக செல்போனில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்படுகிறது.

அதனை தனது நண்பர்களிடம் காண்பித்துள்ளார். அப்போது திருப்பூரை சேர்ந்த நண்பரான தமிழரசன் என்பவர் புவனேஸ்வரன் சிறுமியுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்து வீடியோ, புகைப்படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டார்.

இதையடுத்து அந்த வீடியோ, புகைப்படங்களை சிறுமியின் தந்தையான  சுந்தர்ராஜன் என்பவருக்கு அனுப்பியதுடன், ரூ.15ஆயிரம் பணம் வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜன் இது குறித்து அவினாசி காவல் நிலையத்தில் புகார்  செய்தார். காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதற்கு பிறகும்  சிறுமியுடனான பழக்கத்தை புவனேஸ்வரன் கைவிடவில்லை. மீண்டும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வீடியோ, புகைப்படங்களை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சுந்தர்ராஜன், புவனேஸ்வரனை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக  புவனேஸ்வரனின் நண்பரான தமிழரசனை அணுகியுள்ளார். புவனேஸ்வரனை கொலை செய்தால் பணம் தருகிறேன் என கூறியுள்ளார். இதற்கு தமிழரசனும் ஒத்துக் கொண்டார்.  

கூலிப்படையை ஏவி கொலை

இதைத்தொடர்ந்து தமிழரசன், புவனேஸ்வரனை கொலை செய்ய தனது நண்பர்கள் மற்றும் கூலிப்படையை ஏற்பாடு செய்துள்ளார். பின்னர்   புவனேஸ்வரனை தொடர்பு கொண்ட தமிழரசன், திருமுருகன்பூண்டி பகுதிக்கு வருமாறு அழைத்ததன் பேரில், புவனேஸ்வரன் அங்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதையில் இருந்த புவனேஸ்வரனை, தமிழரசன் காரில் ஏற்றிக்கொண்டு அங்குள்ள ஏ.வி.பி. லே அவுட் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு காரில் இருந்து புவனேஸ்வரன் இறங்கியதும், மறைந்திருந்த 10 பேர் கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால்  புவனேஸ்வரனை வெட்ட முயன்றனர். அதிர்ச்சியடைந்த அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பியோட முயன்றார். இருப்பினும் அந்த கும்பல்  ஓட ஓட விரட்டி புவனேஸ்வரனை சரமாரியாக  வெட்டினர். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த  புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புவனேஸ்வரனை கொலை செய்த நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது சுந்தர்ராஜன் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் தனது மகளை ஆபாச படம் எடுத்து மிரட்டியதால் கூலிப்படையை ஏவி புவனேஸ்வரனை கொலை செய்ததாக சுந்தர்ராஜன் தெரிவித்தார். இதனிடையே தலைமறைவான தமிழரசன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 10 பேர் கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் சிறுமியை ஆபாச வீடியோ எடுத்த வாலிபர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Embed widget