மேலும் அறிய

Coimbatore: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. ஓய்வுபெற்ற ஆசிரியர் உட்பட இரண்டு பேர் போக்சோவில் கைது

இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை அருகே இரு வேறு சம்பவங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகர்ப்புற பகுதியை சேர்ந்தவர் எபினேசர். 77 வயதான இவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர். அதே பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஒருவரின் தந்தையும், எபினேசரும் சிறு வயது முதல் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சிறுமியின் தந்தையும், தாயும் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டிற்கு சென்ற எபினேசர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்த பெற்றோர் சிறுமி அழுது கொண்டிருப்பதைக் கண்டு விசாரித்த போது, எபினேசர் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பொற்றோரிடம் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் எபினேசர் வீட்டுக்குச் சென்று கேட்ட போது, எபினேசர் முறையாக பதிலளிக்காததால் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எபினேசர் மீது புகார் அளித்ததன் பேரில்,  காவல் துறையினர் விசாரணையில் எபினேசர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து எபினேசர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் துறையினர், கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இதேபோல கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் 10 வயது மாணவி. இவர் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.இந்த நிலையில் அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் மாணிக்க சுந்தரம் (47) என்பவர்  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமையாசிரியர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அன்னூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி ஆசிரியர் மாணிக்க சுந்தரத்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget