மேலும் அறிய

குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

மலைக் கிராமங்களில் பயின்று வந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளிகளை மத்திய அரசு நடத்தி வந்தது. இந்த பள்ளிகளில் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து மீட்கப்படும் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை உடன் 2 ஆண்டுகள் சிறப்புப் பயிற்சி வழங்கப்படும். பின்னர் முறைசார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்வி தொடர ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 213 சிறப்புப் பள்ளிகள் நடத்தப்பட்டு வந்தன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயில பேரூரதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் குழந்தைத் தொழிலாளர்கள் சிறப்புப் பள்ளிகளை மத்திய அரசு மூடியுள்ளது. இப்பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள் அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மலைக் கிராமங்களில் பயின்று வந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மாணவர்கள் மீண்டும் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.


குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

ஈரோடு மாவட்டத்தில் மலைக் கிராம மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்காக சுடர் தன்னார்வ அமைப்பு பணியாற்றி வருகிறது. போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராமங்கள் மற்றும் வனக்கிராமங்களில் உள்ள குழந்தைகள் கல்விக்காக இவ்வமைப்பு இயங்கி வருகிறது. மத்திய அரசின் உதவியுடன் ஈரோடு மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை அவ்வமைப்பு நடத்தி வந்தது. இந்த நிலையில் சிறப்புப் பள்ளிகள் மூடல் காரணமாக போக்குவரத்து வசதியற்ற மலைக் கிராம மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமம் இருப்பதால், இடை நிற்றல்கள் அதிகரித்துள்ளதாக சுடர் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் விளாங்கோம்பை, அக்னிபாவி, நாய்க்கன்தொட்டி, தொட்ட கோம்பை ஆகிய பகுதிகளில் உள்ள குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

இது குறித்து சுடர் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் நடராஜ் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் விளாங்கோம்பை மலைக்கிராமத்தில் 2007 ம் ஆண்டிற்கு முன்பு ஒருவர் கூட பள்ளிகளுக்கு சென்றதில்லை. குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக இருந்து வந்தனர். அக்குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்த போது, போக்குவரத்து வசதியில்லாததால் பள்ளிகளுக்கு சென்று வர முடியாது என்றனர். பின்னர் ஒரு மினி வாகனம் ஏற்பாடு செய்து குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல உதவினோம். 

குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

2010 ம் ஆண்டில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 4 தரைப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மீண்டும் கல்வி தடைப் பட்டது. பின்னர் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி அப்பகுதியில் துவங்கப்பட்டதால், மாணவர்கள் மீண்டும் கல்வி பயின்று வந்தனர். இதேபோல 30 இடங்களில் குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்தப்பட்டு வந்தன. 2 ஆண்டுகள் மட்டுமே அந்த சிறப்புப் பள்ளியில் பயில முடியும் என்றாலும், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லாததால் தொடர்ந்து அப்பள்ளியிலேயே மாணவர்கள் பயின்று வந்தனர். அப்பள்ளிகளில் மீட்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்  கல்வி பயின்றுள்ளனர். அங்கு பயின்ற 100க்கும் மேற்பட்டோர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 3 பேர் தேசிய அளவிலான இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றனர். ஒருவர் வேளாண் கல்லூரியில் பயின்று வருகிறார்.


குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கான நிதியை குறைத்துக் கொண்டே வந்த நிலையில், தற்போது அத்திட்டத்தை முழுவதும் கைவிட்டுள்ளது. இதனால் நகரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பெரியளவு பாதிப்பு இல்லை. அருகாமையில் உள்ள பள்ளிகளுக்கு எளிதாக சென்று பயில முடியும். ஆனால் மலைக்கிராமங்களில் உள்ள மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 15 பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் சுமார் 250 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகள் மூடல் - மீண்டும் குழந்தை தொழிலாளராக மாறும் மாணவர்கள்..!

குறிப்பாக விளாங்கோம்பை சிறப்புப் பள்ளியில் படித்த மாணவர்கள், 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வினோபா நகர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் போக்குவரத்து வசதியில்லாததால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. கொரோனா காலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் 3 மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய அரசு இந்த பள்ளிகளை மூடியது தவறான முடிவு.  ஒன்றிய அரசிடம் இத்திட்டத்தை தொடர தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். அல்லது இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும். விளாங்கோம்பை, அக்னிபாவி, நாய்க்கன்தொட்டி, தொட்ட கோம்பை ஆகிய பகுதிகளில் அரசுப் பள்ளிகள் துவங்க வேண்டும். அதுவரை மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இக்கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் மனுவாக அளித்துள்ளோம்” என அவர் தெரிவித்தார். மலைக்கிராம மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget