”கண் சைகை காட்டிய எஸ்.பி. வேலுமணி” - அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சலசலப்பு...
எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது என்ற நிதர்சனமான உண்மையை தவெக தலைவர் விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

சமீபத்தில் கரூர் கூட்டத்தில் தனது சொந்தக் கட்சி தொண்டர்களையே காப்பாற்ற முடியாத ஒருவரால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும் எனவும் "எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது" என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை அறிமுகப்படுத்தும் கூட்டம், சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ஜுனன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதை உறுதி செய்யுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். இந்தியா முழுவதும் உள்ள 100 'ஸ்மார்ட் சிட்டி' நகரங்களில், கோவை உட்பட 11 நகரங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிற்காகப் பெறப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய கட்சியைத் தொடங்கிய விஜயின் கொள்கையைச் கேள்விக்குள்ளாக்கிய எஸ்பி. வேலுமணி, திமுக வெற்றிபெறும் வகையில், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டுமே திமுகவை விமர்சிப்பதுதான் உங்கள் கொள்கையா?" என்று வினவினார்.
வேலுமணியின் ‘அதிரடி ரியாக்ஷன்’
"அரசியல் என்பது சினிமா அல்ல. கேமராவிற்கு முன்னால் நடிப்பது என்பது நிஜ வாழ்க்கை அல்ல என்பதை விஜய் உணர வேண்டும்," என்று வேலுமணி கூறினார்.கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், 41 பேர் தங்கள் உயிரை இழந்தபோதிலும், அங்குச் செல்லவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குக் கூட அவர் செல்லவில்லை. தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களையே அவரால் காப்பாற்ற முடியாவிட்டால், பொதுமக்களை அவரால் எப்படிப் பாதுகாக்க முடியும்?" என்று சுட்டிக்காட்டினார். "எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எனவே தவெக வேட்பாளர்கள் எந்த தொகுதியிலும் வெற்றி பெற மாட்டார்கள் என்றும் எஸ்.பி. வேலுமணி உறுதிபட தெரிவித்தார். இறுதியாக வெற்றி வால் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் அம்மன் அர்ஜுன் தொடர்ந்து முக்கிய நபரையும் வால் பிடிக்க சொல்லி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கண் சைகை செய்தது தற்பொழுது பேசுபொருளாக உள்ளது.























