மேலும் அறிய

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை: சிசிடிவியால் சிக்கிய காவலாளி

சிசிடிவி கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் 'ஹெல்பிங் ஹார்ட்ஸ்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும், கோவை மாவட்ட நிர்வாகமும் இணைந்து மன நலம் பாதித்தவர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கான சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக 'அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம்' நடத்தி வருகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்பட்டு வரும் இம்மையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 26 பெண்கள் உட்பட 49 பேர் இந்த மையத்தில் தங்கியுள்ளனர். சுமார் 14 ஊழியர்கள் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

அந்த மையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், கடந்த 7 மாதங்களாக தங்கியிருந்தார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களின் உடல் நிலையை அடிக்கடி கண்காணிக்கும் மையத்தின் பணியாளர் செவிலியர், அப்பெண்ணின் வயிறு வீங்கி வருவதை கவனித்துள்ளார். பின்னர் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அப்பெண்ணை அழைத்துச் சென்றார். அங்கு அப்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த செவிலியர் அம்மையத்தின் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். பின்னர் அந்த மையத்தின் ஊழியர்கள் விசாரித்த போது, அங்கு பணியாற்றிய கவலாளி லட்சுமணன் என்பவர் அப்பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மையத்திற்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அம்மையத்தின் நிர்வாகிகள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து லட்சுமணனை (வயது 39) கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் என்பதும், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோருக்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் சிகையலங்கார நிபுணர் மற்றும் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் சமீபத்தில் அங்கிருந்து விலகி ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள கோவை மாநகராட்சியின் நாய்கள் காப்பகத்தில் பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அம்மையத்தில் பணிபுரிந்த போது ​​சிசிடிவி கண்காணிப்பைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை கழிவறைக்கு அழைத்துச் சென்று பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததும், இதில் அப்பெண் கர்ப்பம் அடைந்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட லட்சுமணன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
கோவை நீதிமன்றம் அதிரடி: அரசு வழக்கறிஞர்கள் வராததால் ஆட்சியருக்கு ரூ. 62,000 அபராதம்!
Coimbatore power cut: கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
கோவை மக்களே அலர்ட்! நாளை (07-07-2026) உங்க பகுதியில் மின்தடை அறிவிப்பு - முழு லிஸ்ட் இதோ!
Coimbatore power cut: கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்
கோவை மக்களே உஷார்! ஜூலை 6 இல் முழு நேர மின் தடை ஏற்படும் இடங்கள் இதுதான்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
Embed widget