மேலும் அறிய

கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்; நோயாளிகளின் உறவினர்கள் சாலை மறியல்

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் என்ற தகவலின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த  8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டன. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்பட்டது.

ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாலை 6 மணி முதல் பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்து வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கடந்த 10 ம் தேதி அன்று ஒரே நாளில் 15 ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டதால், அவசர தேவைகளுக்காக வாங்க வந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனிடையே ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இன்று முதல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனையறியாது நேற்று டோக்கன் பெற்ற பலர் இன்று, ரெம்டெசிவிர் வாங்க வந்தனர். ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்ததை அறிந்து ஏமாற்றமடைந்தனர். மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு ரெம்டெசிவிர் வழங்க கோரி, அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கடந்த வாரம் முழுவதும் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கினர். இதனால் மருந்து வாங்க முடியாமல் திரும்பிச் சென்றோம். நேற்று மீண்டும் டோக்கன் வழங்கப்பட்டதால், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கினோம். 18 ம் தேதி வரை டோக்கன் வழங்கிய நிலையில், இன்றே ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கும் மருந்து தர மறுக்கின்றனர். இம்மருந்து வாங்க வந்ததால் அலைச்சலும், மன உளைச்சலும் தான் மிச்சம். இதனை முன்கூட்டியே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது” எனத் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம்

இதையடுத்து பீளமேடு காவல் துறையினர் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என சமரசப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தேர்தல் வீரனாக அவதாரம் எடுத்த இருவாச்சி பறை – கோவை Election Icon வெளியீடு...
தேர்தல் வீரனாக அவதாரம் எடுத்த இருவாச்சி பறை – கோவை Election Icon வெளியீடு...
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கிளிக்’ செய்தால் லாட்டரி..? கோவையில் ரூ.2.46 லட்சத்துடன் ஆன்லைன் லாட்டரி விற்பனையாளர்கள் கைது
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்துடன் வெளியேறிய மக்கள்...
கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்துடன் வெளியேறிய மக்கள்...
வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு
வேலை நிறுத்தம் தொடரும் – கோவை ஆட்சியரகம் முன் வருவாய்த்துறை அலுவலர்கள் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
TN Election 2026: பில்லு குறையில, கடன் கரையில, லைவ் தெரியில - சூரியனால் இலைக்கு ஜாக்பாட்? நட்டாத்தில் நாயகன்
TN Election 2026: பில்லு குறையில, கடன் கரையில, லைவ் தெரியில - சூரியனால் இலைக்கு ஜாக்பாட்? நட்டாத்தில் நாயகன்
IND Vs ZIM: அரையிறுதி வாய்ப்பு.. இந்திய அணி தக்கவைக்குமா? ஜிம்பாப்வே உடன் மோதல் - தெ.ஆப்., ஜெயிக்கணும்..
IND Vs ZIM: அரையிறுதி வாய்ப்பு.. இந்திய அணி தக்கவைக்குமா? ஜிம்பாப்வே உடன் மோதல் - தெ.ஆப்., ஜெயிக்கணும்..
Thiruvanmiyur to Uthandi flyover : திருவான்மியூர் டூ உத்தண்டி வெறும் 10 நிமிடம் தான்.! ரூ.2100 கோடியில் மேம்பாலம்- இவ்வளவு சிறப்பம்சமா.?
திருவான்மியூர் டூ உத்தண்டி வெறும் 10 நிமிடம் தான்.! ரூ.2100 கோடியில் மேம்பாலம்- இவ்வளவு சிறப்பம்சமா.?
Embed widget