மேலும் அறிய

கோவையில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம்; நோயாளிகளின் உறவினர்கள் சாலை மறியல்

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் என்ற தகவலின் அடிப்படையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை, கோவையில் கடந்த  8 ம் தேதி துவங்கியது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு வயால் ரெம்டெசிவிர் ஆயிரத்து 568 ரூபாய்க்கும், 6 வயால் ரெம்டெசிவிர் 9 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்று, சிடி ஸ்கேன் சான்று, மருத்துவரின் பரிந்துரை கடிதம், நோயாளி மற்றும் மருந்து வாங்க வருபவரின் ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் வருபவர்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டன. ரெம்டெசிவிர் விற்பனை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவக்குழுவினர் ஆவணங்களை பார்த்து பரிந்துரைப்பவர்களுக்கு மட்டுமே அம்மருந்து வழங்கப்பட்டது.

ரெம்டெசிவிர் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வந்தது. காலை 10 மணிக்கு மருந்து விநியோகம் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும், அதிகாலை 6 மணி முதல் பொதுமக்கள் மருந்து வாங்க குவிந்து வந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்து வாங்கிச் சென்றனர். இதனிடையே கடந்த 10 ம் தேதி அன்று ஒரே நாளில் 15 ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட்டதால், அவசர தேவைகளுக்காக வாங்க வந்தவர்கள் செய்வதறியாது தவித்தனர்.

ரெம்டெசிவிர் விற்பனை துவங்கியதில் இருந்து நாள் ஒன்றுக்கு 500 வயால் வீதம் 7 நாட்கள் விநியோகிக்கப்பட்டது. நேற்று மருந்து விற்பனைக்கு விடுமுறை என்றாலும், இன்று முதல் ரெம்டெசிவிர் வழங்குவதற்கான டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனிடையே ரெம்டெசிவிர் வாங்க வருபவர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், மருந்து தேவைப்படும் நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து இன்று முதல் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மருத்துவக் கல்லூரி முன்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனையறியாது நேற்று டோக்கன் பெற்ற பலர் இன்று, ரெம்டெசிவிர் வாங்க வந்தனர். ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டு இருந்ததை அறிந்து ஏமாற்றமடைந்தனர். மேலும் டோக்கன் பெற்றவர்களுக்கு ரெம்டெசிவிர் வழங்க கோரி, அரசு மருத்துவக் கல்லூரி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல் போராட்டம்

இதுகுறித்து ரெம்டெசிவிர் வாங்க வந்த பொதுமக்கள் கூறுகையில், “கடந்த வாரம் முழுவதும் டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மருந்து வழங்கினர். இதனால் மருந்து வாங்க முடியாமல் திரும்பிச் சென்றோம். நேற்று மீண்டும் டோக்கன் வழங்கப்பட்டதால், பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து டோக்கன் வாங்கினோம். 18 ம் தேதி வரை டோக்கன் வழங்கிய நிலையில், இன்றே ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்களுக்கும் மருந்து தர மறுக்கின்றனர். இம்மருந்து வாங்க வந்ததால் அலைச்சலும், மன உளைச்சலும் தான் மிச்சம். இதனை முன்கூட்டியே செய்திருந்தால் இவ்வளவு பிரச்சனை இருந்திருக்காது” எனத் தெரிவித்தனர்.

சாலை மறியல் போராட்டம்

இதையடுத்து பீளமேடு காவல் துறையினர் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனைகளுக்கே நேரடியாக வழங்கப்படும் என சமரசப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லச் செய்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
உயர பறந்த குழந்தைகள்... விமானத்தில் சென்ற காப்பக மாணவர்கள் மகிழ்ச்சி
தொண்டாமுத்தூரில் அண்ணாமலை – வேலுமணி அதிரடி பேச்சு!! தி.மு.க மீது கடும் விமர்சனம்...
தொண்டாமுத்தூரில் அண்ணாமலை – வேலுமணி அதிரடி பேச்சு!! தி.மு.க மீது கடும் விமர்சனம்...
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பைக் திருட்டு கும்பல் கைது... சிறுவன் உட்பட 6 பேர் ஜெயிலில்
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
கோவையில் பெண் போலீசாருக்கு தொல்லை – பாலியல் குற்றச்சாட்டில் காவல் அதிகாரி சிறையில்...
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் பெஸ்டா? டேட்டா சொல்வது இதுதான்!
Netanyahu New Video: “நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
“நான் சாகவில்லை“; புரளிகளை போட்டு உடைத்த நெதன்யாகு; விரல்களை காட்டி வீடியோ வெளியீடு
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
FASTag Annual Pass Fee Hike: போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
போச்சு.! உயர்த்தப்பட்ட ஃபாஸ்டேக் பாஸ் கட்டணம்; எவ்வளவு.? எப்போதிலிருந்து தெரியுமா.? இத படிங்க முதல்ல
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Embed widget