மேலும் அறிய

கோவையில் மேம்பாலத்தில் பறக்கவிடப்பட்ட பாலஸ்தீன கொடி - 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, உக்கடம் பகுதியில் கட்டப்பட்டும் வரும் மேம்பாலத்தில் பாலஸ்தீனத்தின் கொடி பறக்க விடப்பட்டது.

பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான போர் தீவிரமடைந்து வருவது, உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்:

கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது. இரு தரப்பிலும் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். குறிப்பாக, பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் செய்து வரும் செயல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

தொடர்ந்து நடந்து வரும் போரில் 2,000 குழந்தைகள் 1,100 பெண்கள் உள்பட 5000 பாலஸ்தீனயர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும், இஸ்ரேல் அதை மறுத்து வருகிறது. காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் வகையில் இருப்பதாக ஐநா குற்றம் சுமத்தியுள்ளது. அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்:

கடந்த வாரம், காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல் உலக மக்களின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. காசாவில் கர்ப்பிணி பெண்களும், பச்சிளங்குழந்தைகளும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு ஆளாகியுள்ளனர். மின் தட்டுப்பாடு, தண்ணீர்ப்பற்றாக்குறை என காசா நகரம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளும் மின் பற்றாக்குறையில் ஜெனரேட்டர் மூலமாக இயங்கி வருகிறது.

இதனிடையே பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவாகவும், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்தும் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த 24 ம் தேதியன்று கோவை உக்கடம் பகுதியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலஸ்தீன கொடி:

இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது உக்கடம் பகுதியில் கட்டப்பட்டும் வரும் மேம்பாலத்தில் பாலஸ்தீனத்தின் கொடி பறக்க விடப்பட்டது. அந்த பாலத்தின் மீது ஏறிய சிலர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடியை பறக்க விட்டனர்.

இது தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளர் ரேணுகா தேவி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜமாதே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பின் மாவட்ட செயலாளர் சபீர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹீர், ரபீக் உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget