மேலும் அறிய

கூடலூரில் புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு - இதுவரை 2 பேர் உயிரிழந்ததால் அச்சத்தில் மக்கள்...!

’’இதுவரை புலி தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில் புலியை உடனடியாக பிடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை’’

வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மனிதன்-வன விலங்குகள் இடையேயான மோதல்கள் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள குடியிருப்புகளை ஒட்டியே யானை, புலிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. இதனால் அப்பகுதியில் அதிகளவில் மனித வனவிலங்கு மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சமீப காலமாக புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஸ்ரீ மதுரை ஊராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடமாடிவரும் புலி ஒன்று, கால்நடைகளை வேட்டையாடிவருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் 10க்கும் அதிகமான பசு மாடுகளை புலி தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவருக்கு சொந்தமான ஆறு மாத கன்றுக் குட்டியை புலி தாக்கிக் கொன்றது. புலி தாக்கியதில் கொல்லப்பட்ட கன்றுக் குட்டியின் உடலை வாகனம் மூலம் கொண்டு வந்து, கூடலூர் கோட்ட வன அலுவலகத்தை நூற்றுக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் கூடலூர் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புலி ஆடு, மாடுகளை தொடர்ந்து அடித்துக் கொன்று வருவதாகவும், பலமுறை புகார் அளித்தும் வனத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மூன்று மாநில எல்லையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து, தற்காலிகமாக மறியலைக் கைவிட்டனர். இதையடுத்து வனத் துறையினர் புலியை பிடிக்க கூண்டு வைத்து, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். புலியை பிடிக்க கூண்டிற்குள் இறந்த மாட்டின் உடலை வைத்துள்ளனர்.  இதுவரை கூண்டில் புலி சிக்காமல் சுற்றி வருகிறது.


கூடலூரில் புலி தாக்கி ஒருவர் உயிரிழப்பு - இதுவரை 2 பேர் உயிரிழந்ததால் அச்சத்தில் மக்கள்...!

இந்நிலையில் இன்று பகல் 11 மணி அளவில் தேவர் சோலை பகுதியில் சந்திரன் என்பவர் மாடு மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வந்த புலி சந்திரனை தாக்கியது. இதில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இருந்த அவர், அலறிய சப்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் சத்தங்களை புலியை விரட்டி அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சந்திரன் உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தார். அப்பகுதியில் இதுவரை 2 பேரை புலி தாக்கி கொன்றுள்ளதாகவும், மக்களை அச்சுறுத்தி வரும் புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
மேம்பாலக் குழியில் சைக்கிளுடன் விழுந்த முதியவர் – பதறவைக்கும் CCTV காட்சி...
"கிக் பாக்சிங்கில் கோவை மாணவர்கள் கோல்டன் வேட்டை" - 20 தங்கம் வென்று சாதனை...
Coimbatore power cut: கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
கோவையில் நாளை (06-06-2026) மின் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க?
"அரைகுறை நிர்வாகம் நடத்துகிறது தமிழக அரசு" – செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்...

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget