மேலும் அறிய

கோவையில் ஒன்றரை வயது பெண் குழந்தை சந்தேகமான முறையில் உயிரிழப்பு - கணவனை பிரிந்து வாழும் மனைவியிடம் போலீஸ் விசாரணை

குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருமணம் கடந்த உறவு காரணமா? அல்லது எதிர்பாராத விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி அருகே மர்மமான முறையில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருமணம் கடந்த உறவு காரணமா? அல்லது எதிர்பாராத விபத்தா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 4 வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக இளங்கோவன் தனது மனைவியான சசிகலாவை அழைத்துக் கொண்டு வேலை தேடி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அறிமுகமான செந்தில்குமார் என்பவர்  வேலை வாங்கித் தருவதாக கூறி, இருவரையும் தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்க வைத்துள்ளார்.  

இளங்கோவன் அருகில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பணி செய்து வந்துள்ளார்‌. இந்நிலையில் பத்து ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழும் செந்தில் குமாருக்கும், சசிகலாவுக்கும் இடையே  பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் இளங்கோவனுக்கு தெரிய வந்ததை அடுத்து, மனைவி சசிகலாவுடன் சண்டை போட்டு விட்டு தன் ஆண் குழந்தையை அழைத்து கொண்டு கோத்தகிரிக்கு சென்று விட்டார். இதையடுத்து சசிகலா தனது பெண் குழந்தை மற்றும் இளங்கோவனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். 

இளங்கோவனும் சசிகலாவும் மாலை வேளைகளில் ஒன்றாக அமர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. நேற்று மாலை இருவரும் ஒன்றாக சேர்ந்து குடித்துள்ளனர். அப்போது குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்த நிலையில் குழந்தை கீழே விழுந்ததாகவும், அதனால் குழந்தை பேச்சு மூச்சில்லா மல் போனதாகவும் கூறப்படுகிறது.  குழந்தையை எடுத்துக்கொண்டு சசிகலா பதுவம்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருப்பதைப் கண்ட அருகில் இருந்தவர்கள், உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குழந்தை ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையின் உயிரிழப்புக்கு திருமணம் கடந்த உறவு காரணமா? விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget