மேலும் அறிய

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் புதிய சாதனை...!

’’தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்றுள்ளது’’

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதையடுத்து வன பகுதிகளை ஒட்டியுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பழங்குடியின மக்கள் தடுப்பூசி செலுத்த முதலில் தயக்கம் காட்டிய நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினரின் தொடர் முயற்சி காரணமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களுக்கு நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து 18 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இதனிடையே நூறு சதவீத தடுப்பூசி என்ற இலக்கை அடையும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மது பிரியர்கள் தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் காட்டிய நிலையில், இந்த உத்தரவினால் மது பிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வந்தனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மெகா தடுப்பூசி முகாமில் நீலகிரில் உள்ள 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.


18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி நீலகிரி மாவட்டம் புதிய சாதனை...!

இது குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா கூறும் போது, “நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 இலட்சத்து 24 ஆயிரத்து 748 பேர். அதில் 18 வயதுக்கும் மேல் 5 இலட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். மெகா தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 29 ஆயிரத்து 760 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 13 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில், அதிகம் பேருக்கு கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நீலகிரியில் முதல் தவணை தடுப்பூசி 5 இலட்சத்து 14 ஆயிரத்து 783 பேருக்கு போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இலக்கு எட்டப்பட்டுள்ளது. 6,277 பேருக்கு கொரோனா பாதித்து உள்ளதால், 3 மாதங்களுக்குப் பின் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் 3 மாதங்களுக்குள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு நீலகிரிக்கு அதிக தடுப்பூசிகளை ஒதுக்கியதால், இந்த இலக்கை அடைய முடிந்தது. இந்த பணியில் சிறப்பாக ஈடுபட்ட சுகாதாரத் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 18 வயதுக்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்தவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி மாவட்டம் பெற்று அசத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget