மேலும் அறிய

கோவை : 60 சதவீதம் கொரோனா பரவல் குறைந்துள்ளது - அமைச்சர் கே.என் நேரு

அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக, தற்போது கோவையில்  60 சதவீதம் வரை கொரோனா தொற்று பரவல்  குறைந்துள்ளது என்று அமைச்சர் கே.என் நேரு பேசியுள்ளார்

கோவையில் தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக 60 சதவீத கொரோனா பரவல் குறைந்துள்ளது என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடிக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் முதல் முறையாக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து  நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். பின்னர் 100 தற்காலிக செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்.


கோவை : 60 சதவீதம் கொரோனா பரவல் குறைந்துள்ளது - அமைச்சர் கே.என் நேரு

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு முறை கோவைக்கு வந்து கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக தற்போது கோவையில்  60 சதவீதம் வரை கொரோனா தொற்று பரவல்  குறைந்துள்ளது. 40 சதவீதம் என்றளவில் கொரோனா பரவல் உள்ளது. கரும்பூஞ்சை நோய்க்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கோவையில்  கொரொனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக்கட்டணம் வசூல் செய்வது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூல் செய்யும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை : 60 சதவீதம் கொரோனா பரவல் குறைந்துள்ளது - அமைச்சர் கே.என் நேரு

கோவையில் தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்க காவல் துறைக்கு அறிவுறுத்தபட்டு உள்ளது. கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலையில், அத்திட்டப் பணிகளை பார்வையிடவுள்ளேன். சூயஸ் திட்டத்தை ரத்து செய்வது என்பது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். தமிழ்நாட்டிற்கு வந்த தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடித்தாகிவிட்டது. தற்போது மீண்டும் உலாகளவிய டெண்டர் விட்டுள்ளோம். தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெறும். கிராம அளவில் தடுப்பூசிகள் போட ஆலோசணை செய்யப்பட்டது. மாநகராட்சியில் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கியது உள்ளிட்ட ஊழல் புகார்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மட்டுமே அரசு முழு கவனம் செலுத்திவருகிறது" என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Embed widget