மேலும் அறிய

மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்களுடன் உரையாடினர்.

கொரோனா தொற்று பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகள் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் நவம்பர் 1ஆம் தேதி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் இன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டது. நீண்ட மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் இன்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமாக பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.


மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு முன்னறிவிப்பு இன்றி திடீரென பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்தனர். அப்போது பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் மாணவர்களுடன் உரையாடினர். அப்போது நீண்ட மாத கால இடைவெளிக்கு பின்னர் பள்ளிக்கு வந்த மாணவர்களை வாழ்த்திய அமைச்சர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு வருமாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 


மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

இரண்டு ஆண்டுகள் கழித்து தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை கண்டு உரையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த உதயநிதி ஸ்டாலினை நேரில் பார்த்ததால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக பள்ளி மாணவர்கள் தெரிவித்தனர்.


மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதி ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. கோவை மாவட்டத்தில் 2,064 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5.70 இலட்சம் மாணவர்கள் இன்று பள்ளிகளுக்கு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ, மாணவிகள் 19 மாத கால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் இனிப்புகள், மலர்கள், பலூன்கள் உள்ளிட்டவை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று திறக்கப்பட்ட பள்ளிகளில் வகுப்புகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தனி மனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட உள்ளனர். இன்று திறக்கப்படும் பள்ளி வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டிய அவசியமில்லை. பெற்றோர்களின் விருப்பம் இருந்தாலே மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இணையவழி கல்வி முறையும் தொடரப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget