மேலும் அறிய

’ராசியில்லாத கோவை மாநகராட்சி மேயர் பதவி?’ - தொடர்ந்து சரிவுகளை சந்திக்கும் மேயர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு வந்த மூன்று பேரும் அரசியல் ரீதியாக பின்னடைவு சந்தித்துள்ளனர். அதில் இருவர் பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள100 வார்டுகளில் திமுக கூட்டணி 96வார்டுகளை கைப்பற்றியது. பின்னர் மேயர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வந்தவர் என்பன போன்ற கருத்துகள் அவருக்கு நேர்மறையான பிம்பத்தை தந்தன. மிக குறுகிய காலத்திலேயே அரசியல் உச்சம் பெற்று, அதே வேகத்தில் சரிவையும் சந்தித்துள்ளார் கல்பனா ஆனந்தகுமார். தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை விட, கட்சி தலைமையால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என்பதே உண்மை.

பதவியை பறிக்க காரணம்

முதல் முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதும், மேயர் பதவி கிடைத்த நிலையில் அரசியலில் அனுபவம் இல்லாமல் கல்பனா தடுமாறினார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக காட்டிக் கொண்ட அவர், மற்ற அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. திமுக கவுன்சிலர்களை மதிப்பதில்லை, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அனுப்பும் கோப்புகளை நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால் கல்பனாவின் சரிவிற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் செயல்பாடுகளே காரணமாக அமைந்தன. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிசன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதாலும், செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும் கல்பனா மீது திமுக தலைமை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கோவையில் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும் அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கல்பனாவின் மேயர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சரிவை சந்திக்கும் மேயர்கள்

கடந்த 1996 ம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் மேயர் பதவி உருவாக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றார். அதன் பின்னர் அரசியலில் அவரால் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. இதற்கு அடுத்து 2001 ம் ஆண்டில் மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த மலரவன், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும் கட்சியில் பெரிதாக வளர முடியவில்லை. 2006 ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடாசலம் மேயராக பதவிக்கு வந்த பின்னர், அரசியலில் சரிவையே சந்தித்தார்.

2011 ம் ஆண்டில் கோவை மாநகராட்சி மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த செ..வேலுசாமி, கோவையில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தார். ஆனால் அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே 2014 ம் ஆண்டு அவரது மேயர பதவி பறிக்கப்பட்ட பின்னர், அதிமுகவில் ஒரங்கட்டப்பட்டார். இவருக்கு அடுத்து மேயரான கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்தே விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் தற்போது கல்பனா ஆனந்தகுமாரும் பதவிக்காலம் முடியும் முன்னரே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கோவை மாநகராட்சி மேயர் பதவி ராசியில்லாதக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் மேயர்கள் மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
ABP Premium

வீடியோ

டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
செம்பரம்பாக்கம் ஏரி: வரலாறு காணாத நீர்மட்டம்! 500 கன அடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL Most Expensive Players: டாப் கியருக்கு போன கொல்கத்தா! ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 5 வீரர்கள்
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
IPL 2026 Auction: ரூபாய் 25 கோடி கொடுத்து கேமரூன் கிரீனை வாங்கியது கொல்கத்தா... ஜஸ்ட்டில் மிஸ் செய்த சென்னை!
Embed widget