மேலும் அறிய

’ராசியில்லாத கோவை மாநகராட்சி மேயர் பதவி?’ - தொடர்ந்து சரிவுகளை சந்திக்கும் மேயர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்கு வந்த மூன்று பேரும் அரசியல் ரீதியாக பின்னடைவு சந்தித்துள்ளனர். அதில் இருவர் பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

கடந்த 2022 ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள100 வார்டுகளில் திமுக கூட்டணி 96வார்டுகளை கைப்பற்றியது. பின்னர் மேயர் பதவிக்கு திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், ஒருமனதாக போட்டியின்றி கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.

செந்தில் பாலாஜியின் சிபாரிசின் பேரில், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர், பேருந்தில் சென்னை சென்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வந்தவர் என்பன போன்ற கருத்துகள் அவருக்கு நேர்மறையான பிம்பத்தை தந்தன. மிக குறுகிய காலத்திலேயே அரசியல் உச்சம் பெற்று, அதே வேகத்தில் சரிவையும் சந்தித்துள்ளார் கல்பனா ஆனந்தகுமார். தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதை விட, கட்சி தலைமையால் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார் என்பதே உண்மை.

பதவியை பறிக்க காரணம்

முதல் முறையாக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டதும், மேயர் பதவி கிடைத்த நிலையில் அரசியலில் அனுபவம் இல்லாமல் கல்பனா தடுமாறினார். செந்தில் பாலாஜியின் ஆதரவாளராக காட்டிக் கொண்ட அவர், மற்ற அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடம் மோதல் போக்கை கடைபிடித்ததாக கூறப்படுகிறது. திமுக கவுன்சிலர்களை மதிப்பதில்லை, மாநகராட்சி மண்டல தலைவர்கள் அனுப்பும் கோப்புகளை நிறுத்தி வைப்பதாக புகார்கள் எழுந்தன. ஆனால் கல்பனாவின் சரிவிற்கு அவரது கணவர் ஆனந்தகுமாரின் செயல்பாடுகளே காரணமாக அமைந்தன. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிசன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியதாலும், செயல்பாடுகளில் திருப்தி இல்லாததாலும் கல்பனா மீது திமுக தலைமை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது, வரும் சட்டமன்ற தேர்தலுக்காக கோவையில் கட்சியை பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திலும் அவரை மாற்ற திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் கல்பனாவின் மேயர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

சரிவை சந்திக்கும் மேயர்கள்

கடந்த 1996 ம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் மேயர் பதவி உருவாக்கப்பட்டது. திமுக கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கோவை மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்றார். அதன் பின்னர் அரசியலில் அவரால் பெரிதாக கோலோச்ச முடியவில்லை. இதற்கு அடுத்து 2001 ம் ஆண்டில் மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த மலரவன், சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட போதும் கட்சியில் பெரிதாக வளர முடியவில்லை. 2006 ம் ஆண்டில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வெங்கடாசலம் மேயராக பதவிக்கு வந்த பின்னர், அரசியலில் சரிவையே சந்தித்தார்.

2011 ம் ஆண்டில் கோவை மாநகராட்சி மேயராக பதவிக்கு வந்த அதிமுகவை சேர்ந்த செ..வேலுசாமி, கோவையில் அதிகாரமிக்க நபராக வலம் வந்தார். ஆனால் அவரது பதவிக்காலம் முடியும் முன்னரே 2014 ம் ஆண்டு அவரது மேயர பதவி பறிக்கப்பட்ட பின்னர், அதிமுகவில் ஒரங்கட்டப்பட்டார். இவருக்கு அடுத்து மேயரான கணபதி ராஜ்குமார், அதிமுகவில் இருந்தே விலகும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் தற்போது கல்பனா ஆனந்தகுமாரும் பதவிக்காலம் முடியும் முன்னரே, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் கோவை மாநகராட்சி மேயர் பதவி ராசியில்லாதக பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து வரும் மேயர்கள் மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
”ஒத்துழைக்காத மனிதர்கள்” - பிளாஸ்டிக் குப்பையில் உணவு தேடும் பறவைகள்...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
“100% வாக்கு… 100% ஆபத்து?” - ஹெல்மெட் இல்லாமல் கலைஞரின் சர்ச்சை செயல்...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
TVK Vijay: விஜயின் வேட்புமனுவிலேயே கோளாறு..! ஃபார்ம் கூட ஃபில் பண்ண தெரியலயா? பெரம்பூரில் தள்ளுபடி?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
CSK vs PBKS: சொந்த மண்ணில் கம்பேக் தருமா சிஎஸ்கே? பேட்டிங்கில் தேறுமா? வரிந்து கட்டும் பஞ்சாப் - வெற்றி யாருக்கு?
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget