மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

'கருவறைக்குள் செல்ல வாய்ப்பு இல்லையென்றாலும் கோயிலுக்குள் வழிபாடு செய்வதை தடுக்க கூடாது' - பேரூராதீனம் மருதாசல அடிகளார்

“எல்லோரும் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என 1500 ஆண்டுகளுக்கு முந்தைய திருமறை காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது”

கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள  தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும்  அறிவியல் தமிழ்க்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18 ம் தேதியன்று நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் பறை இசை மாநாட்டினை நடத்துகின்றனர். இதுகுறித்து கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூராதீன மருதாசல அடிகளார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கோவை பேரூர் தமிழ்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18 ம் தேதி உலகப்பொது இசை பறை மாநாடு நடைபெறுகிறது. சங்க இலக்கியங்களில் சிறந்த இசைக் கருவியாக பறை இருந்துள்ளது. நிலங்களை ஐந்து வகைகளாக பிரித்து, அதற்கு தனியாக பறைகள் இருந்துள்ளன. இறைவனை புகழ்ந்து பேசும் போது பறை முக்கியமான இடத்தில் இருந்துள்ளது. காலப்போக்கில் பறை அவமங்கல அமங்கல இசையாக கருதப்படும் நிலை ஏற்பட்டது. அந்நிலையை மாற்றி பறையை மீட்டெடுக்கும் பணிகளை நிமிர்வு கலையகம் செய்து வருகிறது.

பறை இசைக்கு ஊக்கம் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் இறையும் பறையும் என்ற நூல் வெளியிடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பறை இசை வெளிநாடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. பறையிசை என்பது ஓசை தருவது மட்டுமல்ல. நமது மண்ணுக்கு ஏற்றது. பரதமும் பறையும் இணைந்து நடத்துவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இசைகருவிகள்  கண்காட்சியும் நடத்தப்பட இருக்கின்றது. நம்முடைய இசைக்கு தமிழகத்தில் இருப்பவர்கள் தான் ஏற்றம் தர வேண்டும் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம்.  நமது இசைகளுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கல்லூரிகளில் பறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. பறை இசையை மங்கலத்தில் செய்யக்கூடாது என்ற நிலை மாறி, பறையிசையோடு திருமணம் நடக்கிறது. பறை இசையை மக்களிடம் பரவலாக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.


கருவறைக்குள் செல்ல வாய்ப்பு இல்லையென்றாலும் கோயிலுக்குள் வழிபாடு செய்வதை தடுக்க கூடாது' - பேரூராதீனம் மருதாசல அடிகளார்

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் சீல் வைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “எல்லோரும் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என 1500 ஆண்டுகளுக்கு முந்தைய திருமறை காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய வாய்ப்பு இல்லையென்றாலும், அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடுக்க கூடாது. திரையரங்குகள், பேருந்துகள், மதுக்கடைக்கு ஒன்றாக செல்வதை போல கோவில்களுக்கு உள்ளேயும் ஒன்றாக செல்ல மக்களிடம் மனமாற்றம் வர வேண்டும். அதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்” எனப் பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்கள், நிலங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். கோவில் அறங்காவலர்களாக ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை நியமிக்க வேண்டும்.  அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்களை அறங்காவலர்களாக நியமிக்கலாம். சில கோவில்களில் இரண்டு அரசுகளும் பொது நபர்களை அறங்காவலர்களாக நியமித்து உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Arvind Kejriwal : ”போயிட்டு வரேன் மகனே!” திகார் சென்றார் கெஜ்ரிவால் உருக்கமான வீடியோTTV Dhinakaran on ADMK :  ”அதிமுக தலைமை மாறுமா? ஜூன் 4 வரை WAIT பண்ணுங்க” ட்விஸ்ட் வைத்த TTVTemple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?Rahul Angry on Exit Poll : ”கருத்து கணிப்பா இது.. மோடியின் கணிப்பு” ராகுல் காந்தி காட்டம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election : 295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
295 தொகுதிகள் உறுதி.. அடித்து சொல்லும் காங்கிரஸ் : இதென்ன கணக்கு..!
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Kalaignar Karunanidhi”இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்” : கலைஞரை நினைவுகூர்ந்து முதல்வர் பதிவு
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Arvind Kejriwal: ”சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு ஆதாரம் இல்லை” : திகார் ஜெயிலுக்கு திரும்பிய கெஜ்ரிவால்
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Venkatesh Iyer Marriage: கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர் வெங்கடேஷ் ஐயர் திருமணம் - யார் இந்த ஸ்ருதி ரகுநாதன்?
Health Insurance: அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் -  காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
அரசே வழங்கும் 15 மருத்துவ காப்பீடு திட்டங்கள் - காசே வேணாம், ரூ.5 லட்சம் வரை சிகிச்சை..
Gautam Adani: ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
ஆசியாவின் புதிய நம்பர் 1 பணக்காரர்..! அம்பானியை பின்னுக்கு தள்ளிய அதானி
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
Embed widget