Crime : கோவையில் கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்தவர் கைது ; 320 கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல்
சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை பகுதியில் 1.600 கிலோ எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவற்றை விற்பனை செய்பவர்கள் மீதும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம் சித்தநாயக்கன் பாளையம் பகுதியில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக சுல்தான்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடமான சித்தநாயக்கன் பாளையம் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சூலூர் பகுதியை சேர்ந்த பப்ளு குமார் (36) என்பவர் விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பப்ளு குமாரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக வைத்திருந்த 1.600 கிலோ கிராம் எடையுள்ள 320 கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பப்ளு குமார் மீது வழக்குப் பதிவு செய்த காவல துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள் பற்றி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திட வேண்டும் எனவும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
ட்ரெண்டிங் செய்திகள்





















