மேலும் அறிய

ஜன்னலில் தூக்கு; முட்டிபோட்ட நிலையில் சடலம் : பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்

காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றை கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார்.

கோவையில் பெண் காவலர் மகாலட்சுமி ஜன்னலில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. 25 வயதான இவர் கோவையில்  ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகின்றார். இவர் தன்னுடன் பணிபுரியும் சக காவலர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பில் மகாலட்சுமி தூக்கு போட்டு தற்கொலை கொண்டார். நீண்ட நேரமாக மகாலட்சுமி தொலைபேசி அழைப்பை ஏற்காததால் காவலர் அருண் உப்பிலிபாளையம் குடியிருப்பிற்கு சென்று பார்த்தபோது, மகாலட்சுமி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றைக்கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி சடலமாக மீட்கப்பட்டு இருந்தார். இதனையடுத்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றிய பந்தயசாலை காவல் துறையினர், கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை  சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜன்னலில் தூக்கு; முட்டிபோட்ட நிலையில் சடலம் : பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்

இதனிடையே வீட்டு ஜன்னலில் தூக்கு போட்டு இறக்க வாய்ப்பில்லாத நிலையில், காவலர் மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், “மகாலட்சுமி தற்கொலை செய்துகொள்ள கூடியவர் கிடையாது. தைரியமான பெண். காவலர் அருணை காதலித்த நிலையில், அருணின் பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. எனினும் அருண் தொடர்ந்து மகாலட்சுமியை திருமணம் செய்துகொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார். மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் உள்ளது. பந்தய சாலை காவல் துறையினர் மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.



ஜன்னலில் தூக்கு; முட்டிபோட்ட நிலையில் சடலம் : பெண் காவலர் மரணத்தை சந்தேகிக்கும் உறவினர்கள்

இதனையடுத்து மகாலட்சுமி மற்றும் அருண் ஆகிய இருவரின் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு, பந்தய சாலை காவல் துறையினர் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Election 2024: 6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Election 2024: இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Lok Sabha Election 2024: 6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
6.23 கோடி வாக்காளர்கள், 68,321 வாக்குச்சாவடிகள்.. தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Election 2024: இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
இன்று வாக்குப்பதிவு: களத்தில் 8 மத்திய அமைச்சர்கள், 3 முன்னாள் சி.எம்., முன்னாள் ஆளுநர்
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
கோவை வாக்காளர்களே வாக்களிக்கத் தயாரா? தேர்தல் தொடர்பான முழு விபரம் இதோ..!
Lok Sabha Elections: தமிழ்நாட்டுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகள் எவை எவை? க்ளியர் லிஸ்ட் இதோ!
Lok Sabha Elections: தமிழ்நாட்டுடன் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 102 தொகுதிகள் எவை எவை? க்ளியர் லிஸ்ட் இதோ!
Today Rasipalan:மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
மேஷத்துக்கு புகழ்; ரிஷபத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 19) பலன்கள்!
Lok Sabha Elections 2024: இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு - கோடீஸ்வர வேட்பாளர்கள் யார்? டாப் 3 லிஸ்டில் அதிமுக
Lok Sabha Elections 2024: இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு - கோடீஸ்வர வேட்பாளர்கள் யார்? டாப் 3 லிஸ்டில் அதிமுக
Embed widget