மேலும் அறிய

கொலை முயற்சியில் தப்பிய ‛வட்டி’ பாட்டி கொரோனாவிற்கு பலி

வட்டி கேட்டு தொல்லை தந்த மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்து மீண்ட அவர் கொரோனா தொற்றில் சிக்கி பலியானார்.

கோவை அருகே வட்டி கேட்டு தொல்லை செய்த மூதாட்டியை கடத்தி கொலை செய்து நகையை அபகரித்து நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் நரசீபுரம் அருகேயுள்ள வெள்ளிமலைப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்.  35 வயதான இவர், கடந்த 10 ஆம் தேதி 60 வயதான தனது தாய் சின்னத்தங்கம் என்கிற சுப்புலட்சுமியை காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன சின்னத்தங்கம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சின்னத்தங்கத்தின் செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி (49) என்பவரது வீட்டிற்கு வட்டி பணத்தை வசூலிக்க சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீராசாமி வீட்டிற்கு சென்ற காவல் துறையினருக்கு, அங்கு வீராச்சாமி இல்லாதது சந்தேகத்தை அதிகரித்தது. மேலும் வீராசாமியின் செல்போன் சிக்னல்களை வைத்து  தேடுதல் பணியை தீவிரப்படுத்திய போலீசாருக்கு கரூரில் வீராசாமி தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீராசாமியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட வீராசாமி

அதில் சின்னத்தங்கத்திடம் வீராசாமி 50  ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், கடந்த 8 ஆம் தேதி சுப்புலட்சுமிக்கு போன் செய்து வட்டி பணம் வந்து வாங்கிச் செல்லுமாறு போன் செய்துள்ளார். இதை நம்பி வீராசாமியின் வீட்டிற்குச் சென்ற சின்னத்தங்கத்திடம்  நைசாக பேசி தூக்க மாத்திரையை உயர் ரத்த அழுத்த மாத்திரை எனக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட சின்னத்தங்கம் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதைப் பயன்படுத்தி வீராசாமி சின்னத்தங்கத்தை தனது காரில் ஏற்றி பொள்ளாச்சி - நெகமம் சாலையில் உள்ள பிஏபி கால்வாய் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கியதோடு, இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். மயக்கத்தில் இருந்த சின்னத்தங்கம் மரணமடைந்ததாக நினைத்து பிஏபி கால்வாய் தண்ணீரில் தள்ளி விட்டு, கரூருக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னத்தங்கத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெகமம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சின்னத்தங்கத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இதுகுறித்து தகவல் கிடைத்த ஜெகதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தனது தாய் என்பதை உறுதிசெய்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சின்னத்தங்கம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சின்னத்தங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஆலாந்துறை காவல் துறையினர், வீராசாமியை கைது செய்தனர். சின்னத்தங்கத்திடம் இருந்து பறித்துச் சென்ற 6.5  சவரன் தங்க நகையையும்  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆள் கடத்தல் நகை பறித்தல், கொலை செய்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வீராசாமி மீது வழக்கு  பதிவு செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

Coimbatore Airport: கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்
கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்
coimbatore power cut: கோவையில் நாளை (16-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (16-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Vs Congress : ’எதிரியை விட துரோகியை வீழ்த்துறதுதான் முக்கியம்’ 3வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
'காங்கிரஸ் துரோகத்திற்கு பாடம்’ 3-வது அணி அமைக்கும் முயற்சியில் திமுக..!
TASMAC Bars : டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
டோட்டலா மாறப்போகுது டாஸ்மாக்.! இனி பார்களில் குடிமகன்களுக்கு ஜாலி தான்- அரசின் செம பிளான் இதோ..
New Passport Rules: பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
பாஸ்போர்ட் விதிகளை மாற்றிய அரசு - கட்டணம் தொடங்கி செல்லுபடியாகும் காலம் வரை - முழு அப்டேட்
TMC: ரைட்ரா..! 15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
15 ஆண்டுகள் ஆண்ட கட்சியின் பெயர், சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் - மம்தா பானர்ஜி ஷாக்
TN Weather News: புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி..! 27 மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
TVK vs DMK:
TVK vs DMK: "குடும்ப கட்சியால் பெரியார் சிலையை கட்சி அலுவலகத்தில் வைக்க முடியாது.." திமுக-வை விளாசிய தவெக
Hiranandani: சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
சென்னையில் 215 ஏக்கரில் ரூ.2,000 கோடியில் ப்ரீமியம் திட்டம் - 50 லட்சம் சதுர அடி பரப்பளவு, வேலைவாய்ப்பு
ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளா.? ஊழியர்களுக்கு செக்- லிஸ்ட் ரெடி செய்யும் அரசு
ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளா.? ஊழியர்களுக்கு செக்- லிஸ்ட் ரெடி செய்யும் அரசு
Embed widget