மேலும் அறிய

கொலை முயற்சியில் தப்பிய ‛வட்டி’ பாட்டி கொரோனாவிற்கு பலி

வட்டி கேட்டு தொல்லை தந்த மூதாட்டி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்து மீண்ட அவர் கொரோனா தொற்றில் சிக்கி பலியானார்.

கோவை அருகே வட்டி கேட்டு தொல்லை செய்த மூதாட்டியை கடத்தி கொலை செய்து நகையை அபகரித்து நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் நரசீபுரம் அருகேயுள்ள வெள்ளிமலைப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்குமார்.  35 வயதான இவர், கடந்த 10 ஆம் தேதி 60 வயதான தனது தாய் சின்னத்தங்கம் என்கிற சுப்புலட்சுமியை காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன சின்னத்தங்கம் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தது தெரியவந்தது. மேலும் சின்னத்தங்கத்தின் செல்போன் அழைப்புகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அவர் கடைசியாக அதே பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி (49) என்பவரது வீட்டிற்கு வட்டி பணத்தை வசூலிக்க சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீராசாமி வீட்டிற்கு சென்ற காவல் துறையினருக்கு, அங்கு வீராச்சாமி இல்லாதது சந்தேகத்தை அதிகரித்தது. மேலும் வீராசாமியின் செல்போன் சிக்னல்களை வைத்து  தேடுதல் பணியை தீவிரப்படுத்திய போலீசாருக்கு கரூரில் வீராசாமி தங்கி இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து வீராசாமியை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட வீராசாமி

அதில் சின்னத்தங்கத்திடம் வீராசாமி 50  ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில், கடந்த 8 ஆம் தேதி சுப்புலட்சுமிக்கு போன் செய்து வட்டி பணம் வந்து வாங்கிச் செல்லுமாறு போன் செய்துள்ளார். இதை நம்பி வீராசாமியின் வீட்டிற்குச் சென்ற சின்னத்தங்கத்திடம்  நைசாக பேசி தூக்க மாத்திரையை உயர் ரத்த அழுத்த மாத்திரை எனக் கொடுத்து சாப்பிட வைத்துள்ளார். மாத்திரையை சாப்பிட்ட சின்னத்தங்கம் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துள்ளார். இதைப் பயன்படுத்தி வீராசாமி சின்னத்தங்கத்தை தனது காரில் ஏற்றி பொள்ளாச்சி - நெகமம் சாலையில் உள்ள பிஏபி கால்வாய் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கியதோடு, இரும்பு கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். மயக்கத்தில் இருந்த சின்னத்தங்கம் மரணமடைந்ததாக நினைத்து பிஏபி கால்வாய் தண்ணீரில் தள்ளி விட்டு, கரூருக்கு தப்பிச் சென்றுள்ளார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னத்தங்கத்தை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு நெகமம் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததுடன், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சின்னத்தங்கத்தை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இதுகுறித்து தகவல் கிடைத்த ஜெகதீஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் தனது தாய் என்பதை உறுதிசெய்தார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சின்னத்தங்கம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் மீண்டும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று சின்னத்தங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து ஆள் கடத்தல் வழக்கை கொலை வழக்காக மாற்றிய ஆலாந்துறை காவல் துறையினர், வீராசாமியை கைது செய்தனர். சின்னத்தங்கத்திடம் இருந்து பறித்துச் சென்ற 6.5  சவரன் தங்க நகையையும்  காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். ஆள் கடத்தல் நகை பறித்தல், கொலை செய்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வீராசாமி மீது வழக்கு  பதிவு செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK”2026 CM நான் தான்” EPS-க்கு விஜய் BYE! டார்கெட் உதயநிதிSeeman Angry on Vijayalakshmi |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
Delimitation in India: 50 ஆண்டு தடை, கடைசியாக தொகுதி மறுவரையறை நடந்தது எப்போது? ​​எப்படி? எண்ணிக்கைக்கான காரணங்கள்?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
IND Vs NZ CT 2025: ஹாட்ரிக் வெற்றி யாருக்கு? இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல், பலம், பலவீனம் - துபாயில் மழை வருமா?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Rahul Gandhi: படுகொலை.. சூட்கேசில் 22 வயது பெண்ணின் உடல், ராகுல் காந்தி ஷாக் - என்ன ஆச்சு? யார் இவர்?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
Ramadan 2025: ரமலான் நோன்பு - விரதத்தின் போதும் சுறுசுறுப்பாக இருப்பது எப்படி? செய்யக் கூடாதவை என்ன?
TN Public Exams: கவனம்..!  பொதுத்தேர்வு - 25 லட்சம் மாணவர்கள், 45,000 ஆசிரியர்கள் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
TN Public Exams: கவனம்..! பொதுத்தேர்வு - 25 லட்சம் மாணவர்கள், 45,000 ஆசிரியர்கள் - தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
Prashant Kishor on TVK: சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
சிங்கம் சிங்கிளாதான் வருது..தவெகவின் முக்கிய முடிவை தெரிவித்த பிரஷாந்த் கிஷோர்...
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா கூட்டணியில் பற்றி எரியுமா? பாஜகவின் கேம் பிளான்!
Embed widget