மேலும் அறிய

கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெறுகிறது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது தொடர்பாக, சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தியுள்ளனர்.

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோல கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா, சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்.எல்.. ஆறுக்குட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர்.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கடந்த சில மாதங்களாக முன்னேற்றம் இல்லாமல் இந்த வழக்கு இருந்து வந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ளது. கடந்த வாரம் சசிகலாவிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் அதிமுக நிர்வாகிகளிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், அவரது சகோதரர் சிபி ஆகியோரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் தலைமையில் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.


கோடநாடு கொலை வழக்கு - ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக விசாரணை

கோடநாடு, போயஸ்கார்டன் என ஜெயலலிதா தங்கி இருக்கும் இடங்களில் ஜெயலலிதாவின் நிழலாக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவைச் யாரெல்லாம் சந்திக்கிறார்கள், எது தொடர்பாக சந்திக்கிறார்கள் என்பதும், யாரைல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்பதையும் பார்த்துக்கொள்பவராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவிற்கு வரும் கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து அவரது பார்வைக்கு கொண்டு செல்வது உட்பட அனைத்து பணிகளையும் பார்த்து கொண்டவர். கோடநாடு பங்களாவில் பணிக்கு நியமிக்கபட்டவர்கள் குறித்தும் கோடநாடு பங்களாவில் உட்புற வேலைபாடுகளை செய்த சஜீவனின் பங்கு குறித்தும் பூங்குன்றனிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கபடுகின்றது. இந்நிலையில் இன்று கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் பூங்குன்றனிடம் இரண்டாவது நாளாக தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Chennai Outer Ring Road: அடுத்த இடி - தனியார் வசமாகும் சென்னை அவுட்டர் ரிங் ரோட் - 25 வருடத்திற்கு கப்பம் கட்டணுமாம்
Chennai Outer Ring Road: அடுத்த இடி - தனியார் வசமாகும் சென்னை அவுட்டர் ரிங் ரோட் - 25 வருடத்திற்கு கப்பம் கட்டணுமாம்
Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..
Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..
Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!
Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!
Tamilnadu Roundup: கள ஆய்வில் முதலமைச்சர்.. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: கள ஆய்வில் முதலமைச்சர்.. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 10 மணி சம்பவங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Outer Ring Road: அடுத்த இடி - தனியார் வசமாகும் சென்னை அவுட்டர் ரிங் ரோட் - 25 வருடத்திற்கு கப்பம் கட்டணுமாம்
Chennai Outer Ring Road: அடுத்த இடி - தனியார் வசமாகும் சென்னை அவுட்டர் ரிங் ரோட் - 25 வருடத்திற்கு கப்பம் கட்டணுமாம்
Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..
Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம் - கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க இந்தியா திட்டம், அதுவும் நேரடியாக..
Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!
Anbumani VS Ramadoss: நாற்காலி போட்ட அன்புமணி.. போட்டோ கூட வைக்காத ராமதாஸ் - திக்குமுக்காடும் பாமக தொண்டர்கள்!
Tamilnadu Roundup: கள ஆய்வில் முதலமைச்சர்.. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: கள ஆய்வில் முதலமைச்சர்.. கொட்டும் மழையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - 10 மணி சம்பவங்கள்
Pak On Ind: ”நாங்க ஒரு குப்பை லாரி, ஏவுகணைக்கு பஞ்சமில்லை” பாகிஸ்தான் மிரட்டல், கொம்பு சீவி விடும் அமெரிக்கா?
Pak On Ind: ”நாங்க ஒரு குப்பை லாரி, ஏவுகணைக்கு பஞ்சமில்லை” பாகிஸ்தான் மிரட்டல், கொம்பு சீவி விடும் அமெரிக்கா?
இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது.. தமிழக அரசு கொண்டு வரப்போற அசத்தல் ப்ளான் - டோன்ட் வொர்ரி
இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது.. தமிழக அரசு கொண்டு வரப்போற அசத்தல் ப்ளான் - டோன்ட் வொர்ரி
11 கார்கள்... ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் டாடா தள்ளுபடி.. 1 லட்சம் வரை ஆஃபர் - பட்டியல் இதுதான்!
11 கார்கள்... ஆடித்தள்ளுபடியை மிஞ்சும் டாடா தள்ளுபடி.. 1 லட்சம் வரை ஆஃபர் - பட்டியல் இதுதான்!
Hyundai Bayon: NO.1 மாடலுக்கு போட்டியாகும் ஹுண்டாயின் பேயோன் - ஹைப்ரிட் இன்ஜின், பட்ஜெட் விலை - லாஞ்ச் எப்போ?
Hyundai Bayon: NO.1 மாடலுக்கு போட்டியாகும் ஹுண்டாயின் பேயோன் - ஹைப்ரிட் இன்ஜின், பட்ஜெட் விலை - லாஞ்ச் எப்போ?
Embed widget