மேலும் அறிய

கோவையில் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

கோவை மாவட்டத்தில் அரசு அறிவித்த கூலியை வழங்க வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக திரும்ப பெறப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டங்கள் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாயும், நகராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாயும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாயும் என நிர்ணயம் செய்யப்பட்டது.

கூலி நிர்ணயம் செய்யப்பட்டாலும் அதைவிட குறைவான கூலியே ஒப்பந்தத்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து தூய்மை பணியாளர் தொழிற்சங்கத்தினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், நேற்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதனையடுத்து கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 412 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகின்றது எனவும், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 606 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும், பேரூராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 529 ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் 475 ரூபாய் மட்டுமே வழங்கபடுகின்றது எனவும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர். அரசு நிர்ணயம் செய்த கூலியை வழங்க வேண்டும் எனவும், மேலும்தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க கூடாது எனவும் கூறிய தூய்மை பணியாளர்கள், எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடருமென தெரிவித்தனர். தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக கோவை மாநகரில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு பணிக்கு திரும்பினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget