மேலும் அறிய

கொரோனாவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்..! பில் கட்டுவதற்கு வீட்டை விற்கும் குடும்பம்..! கோவையில் பரிதாபம்

கோவையில் கொரோனா வைரஸால் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், அவரது சிகிச்சை கட்டணத்தை செலுத்துவதற்காக சொந்த வீட்டை விற்கும் அவல நிலைக்கு அவரது குடும்பத்தினர் ஆளாகியுள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் காதர் மீரான். 41 வயதான இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது வருமானத்தை நம்பியே இவரது குடும்பம் உள்ளது. இந்த நிலையில், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக காதர் மீரான் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் 13-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக காதர் மீரான் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு போதியளவு படுக்கைகள் இல்லாததால் அவரை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்க இயலவில்லை.

இதையடுத்து, அவரது குடும்பத்தார் உடனடியாக காதர் மீரானை கோவை மாவட்டம் நிலாவூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த காதர் மீரான் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


கொரோனாவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்..! பில் கட்டுவதற்கு வீட்டை விற்கும் குடும்பம்..! கோவையில் பரிதாபம்

அங்கு முதலில் ஆக்சிஜன் படுக்கையிலும், பின்னர் ஐ.சி.யூ..வார்டிலும் மருத்துவமனை நிர்வாகம் காதர் மீரானுக்கு சிகிச்சை அளித்தது. ஆனால், ஆக்சிஜன் படுக்கைக்கு தினசரி ரூபாய் 18 ஆயிரத்து 500ம், ஐ.சி.யூ. படுக்கைகக்கு தினசரி ரூபாய் 36 ஆயிரத்து 500 ஆகவும் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. காதர் மீரானை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரது குடும்பத்தினரும் மருத்துவமனை கட்டணத்தை அளித்து வந்தனர். இதனால், காதர் மீரான் சேமித்து வைத்திருந்த ரூபாய் இரண்டரை லட்சத்தையும் மருத்துவமனை செலவிற்காக அவரது குடும்பத்தினர் கட்டணமாக செலுத்திவிட்டனர். இருப்பினும், ஐ.சி.யூ. வார்டிலே தொடர் சிகிச்சை பெற்று வந்த காதர் மீரானின் சிகிச்சைக்காக அவர் சொந்தமாக ஓட்டி வந்த ஆட்டோவும் ரூபாய் 2 லட்சத்திற்கு விற்கப்பட்டது. அந்த பணத்தையும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் கட்டணமாக செலுத்தினர்.

ஆனாலும், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்த காதர் மீரான் கடந்த ஜூன் 4-ந் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே காதர் மீரான் இறந்த சோகத்தில் இருந்த குடும்பத்தினருக்கு, மருத்துவமனை நிர்வாகம் அளித்த மருத்துவ கட்டண ரசீது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.


கொரோனாவால் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்..! பில் கட்டுவதற்கு வீட்டை விற்கும் குடும்பம்..! கோவையில் பரிதாபம்

26 நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த காதர் மீரானுக்கு மருத்துவமனை கட்டணமாக ரூபாய் 14.50 லட்சத்தை மருத்துவமனை நிர்வாகம் நிர்ணயித்தது. வங்கியில் இருந்த சேமிப்பு பணம், ஆட்டோ என்று அனைத்தையும் இழந்து விட்ட நிலையில் இருந்த காதர் மீரான் குடும்பத்தினருக்கு அவர்களது உறவினர்கள் ஒரளவு உதவி செய்தனர். இருப்பினும், உறவினர்கள் செய்த உதவித்தொகை போக மருத்துவமனை நிர்வாகத்திற்கு ரூபாய் 9 லட்சம் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலைக்கு சென்றனர். காதர் மீரான் 20 ஆண்டுகள் மிகவும் கடினமாக உழைத்து, இரவு பகல் பாராமல் ஆட்டோ ஓட்டி பொள்ளாச்சியில் சிறியதாக வீடு வாங்கியிருந்தார். அவரது சிகிச்சை கட்டணத்தை செலுத்த போதியளவு பணம் இல்லாததால் காதர் மீரான் ஆசை, ஆசையாக வாங்கிய வீட்டை விற்கும் சூழலுக்கு அவர்களது குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டை விற்றாவது மருத்துவமனை கட்டணத்தை நிச்சயம் திருப்பிச் செலுத்திவிடுவேன் என்று கல்லூரி இறுதியாண்டு படித்து வரும் காதர் மீரான் மகன் கூறுகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vijay Antony Vs Blue Sattai |தாக்கி பேசிய ப்ளூ சட்டை விஜய் ஆண்டனியின் பதிலடி FIRE விடும் நெட்டிசன்ஸ்Lok Sabha Election 2024 | சர்வே ரிப்போர்ட்... அதிர்ச்சியில் திமுக!Revanth Reddy on Udhayanidhi | ”உதயநிதியை தண்டிக்கனும்”காங்கிரஸ் முதல்வர் போர்க்கொடி- ரேவந்த் ரெட்டிTN Polling percentage issue | மாயமான வாக்குகள்? வாக்கு சதவீதத்தில் குளறுபடி! அதிர்ச்சியில் மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலி - கோவை எல்லைகளில் சோதனைகள் தீவிரம்
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
Breaking Tamil LIVE: தாளவாடியில் சூறைக்காற்றுடன் மழை - மக்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனையில் சிக்கல்? எலான் மஸ்க் - மோடி சந்திப்பில் ட்விஸ்ட்! பரபரப்பு பின்னணி!
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு பறந்த புகார்! நடிகர் விஜய்க்கு சிக்கல்?
Thirukkadaiyur Temple: எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
எமன் உயிரை எடுத்த சிவன்; திருக்கடையூர் கோயில் ஐதீக நிகழ்வு
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி! குரு தோஷம் நீங்க கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்! முழு விவரம்
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
Ethirneechal Serial: மும்மரமாக நடக்கும் திருமண ஏற்பாடு.. உறுதியாக இருக்கும் ஜனனி.. எதிர்நீச்சலில் இன்று!
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
ஜஃப்லாங் பார்டரில் இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது கல் வீச்சு.. தாக்கிய வங்கதேச பயணிகள்? ஏன்?
Embed widget