மேலும் அறிய

கோவையில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை ; காவல்துறையினர் விசாரணை

குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். 41 வயதான இவர் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். கோவை மாவட்டம் காரமடை காவல் நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாமோதரன் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இதனிடையே தாமோதரன் அவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அவரது மனைவி குழந்தையுடன் அவரது பெற்றோரின் ஊரான விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று விட்டார். தாமோதரன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். 

தாமோதரன் தற்போது மேட்டுப்பாளையம் அருகேயுள்ள ஜடையம்பாளையம் கிராமம் வீராசாமி நகரில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 10 ம் தேதி முதல் தாமோதரன் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16 ம் தேதி மாலை 6 மணிளவில் வீட்டில் தனியாக இருந்த தாமோதரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்பகுதியில் வசிக்கும் சுகுமார் என்பவர் தாமோதரன் வீட்டில் இரண்டு நாட்களாக இரவில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தமையால் சந்தேகத்தின் பேரில், இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தாமோதரன் தூக்கு மாட்டிய நிலையில் சடலமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுகுமார் காரமடை காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் தாமோதரன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது. குடும்பப் பிரச்சனை காரணமாக தாமோதரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்துகொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060).

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: நாளை கோவையில் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே செக் பண்ணுங்க
நாளை கோவையில் மின்தடை - எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே செக் பண்ணுங்க
TN Minister: பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்னைக்கு தீர்வு தான் என்ன? ஸ்டிக்கர் விவகாரம் - அமைச்சர் விக்னேஷ் பதில்
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்தில் கொடூரர்கள் சிக்கியது எப்படி? ஐஜி சொன்ன தகவல்
கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்தில் கொடூரர்கள் சிக்கியது எப்படி? ஐஜி சொன்ன தகவல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget