மேலும் அறிய

திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

’’6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு’’

கோவை அருகே குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த தளபதி முருகேசன் என்பவர் இருந்தார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் பார்த்திபன், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.


திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட  விசாரணையில், கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் டெண்டர் பணிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டதுடன், இந்த பணியை 27 பிரிவுகளாக பிரித்து ஒப்பந்ததாரர்களுக்கு  வழங்க அலுவலர்கள் மேகனா மற்றும் மகேந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், இதற்கு பேரூராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த தளபதி முருகேசன் ஒப்புதல் வழங்கியதும் தெரியவந்தது. குழாய் பதிக்கும் பணிக்கு ஒப்பந்தம் பெற்ற பார்த்திபன் மற்றும் புவனேஸ்வரி தரமற்ற பிவிசி குடிநீர் குழாய்களை பதித்ததும், அதன் மூலம் சுமார் 48 லட்சம் ரூபாய் அளவுக்கு அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

3-வது மலையில் மீண்டும் மரணம்... வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் தொடரும் அபாயம்
3-வது மலையில் மீண்டும் மரணம்... வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் தொடரும் அபாயம்
“ஆளும் கட்சி vs எதிர்க்கட்சி வேறுபாடு” - வேட்புமனு தாக்கல் செய்து அம்மன் அர்ஜுனன் அதிரடி குற்றச்சாட்டு...
“ஆளும் கட்சி vs எதிர்க்கட்சி வேறுபாடு” - வேட்புமனு தாக்கல் செய்து அம்மன் அர்ஜுனன் அதிரடி குற்றச்சாட்டு...
”அண்ணாமலையுடன் வானதி சீனிவாசன் எண்ட்ரி” - மேளதாளத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல்...
”அண்ணாமலையுடன் வானதி சீனிவாசன் எண்ட்ரி” - மேளதாளத்துடன் வந்து வேட்பு மனு தாக்கல்...
“100 பேர் வந்தாலும் ரெடி” – வேட்புமனு தாக்கல் செய்த பாலாஜி மாஸ் பேச்சு...
“100 பேர் வந்தாலும் ரெடி” – வேட்புமனு தாக்கல் செய்த பாலாஜி மாஸ் பேச்சு...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget