மேலும் அறிய

திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

’’6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு’’

கோவை அருகே குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பேரூராட்சியில் கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பேரூராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த தளபதி முருகேசன் என்பவர் இருந்தார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அப்பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிப்பதில் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியின் உதவி செயற்பொறியாளர் மேனகா, செயல் அலுவலர் ரேணுகா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரன், ஒப்பந்ததாரர் பார்த்திபன், புவனேஸ்வரி மற்றும் அப்போதைய பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது.


திமுக முன்னாள் பேரூராட்சித் தலைவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு

இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட  விசாரணையில், கண்ணம்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் டெண்டர் பணிகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் தகுதியற்றவர்களுக்கு வழங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டதுடன், இந்த பணியை 27 பிரிவுகளாக பிரித்து ஒப்பந்ததாரர்களுக்கு  வழங்க அலுவலர்கள் மேகனா மற்றும் மகேந்திரன் ஆகியோர் உடந்தையாக இருந்ததும், இதற்கு பேரூராட்சி தலைவராக இருந்த திமுகவைச் சேர்ந்த தளபதி முருகேசன் ஒப்புதல் வழங்கியதும் தெரியவந்தது. குழாய் பதிக்கும் பணிக்கு ஒப்பந்தம் பெற்ற பார்த்திபன் மற்றும் புவனேஸ்வரி தரமற்ற பிவிசி குடிநீர் குழாய்களை பதித்ததும், அதன் மூலம் சுமார் 48 லட்சம் ரூபாய் அளவுக்கு அரசு நிதி முறைகேடு செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 6 பேர் மீதும் கூட்டு சதி, குற்றம் செய்ய தூண்டுதல்,  தவறான ஆவணங்களை தயாரித்தல், பொது ஊழியர் குற்றம் செய்தல், மோசடி , ஊழல் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு கடந்த மார்ச் 29ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்த நிலையில், தற்போது முன்னாள் பேரூராட்சித் தலைவர் தளபதி முருகேசன் உட்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
ABP Premium

வீடியோ

H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
பொங்கல் விடுமுறை மழையிலேயே போய்டுமா? ஒரு பக்கம் குளிர் அதிகரிக்குமாம் - வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை என்ன?
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Super She Island : இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் இருக்கு.?
இளம் பெண்களுக்காக மட்டுமே ஒரு தனி தீவு.! ஆண்களுக்கு நோ என்ட்ரி- அப்படி என்ன ரகசியம் அங்கு இருக்கு.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Tata Offers: ரூ.85 ஆயிரம் வரை ஆஃபர்... Altroz டூ Punch... டாடா தந்த அருமையான தள்ளுபடி!
Embed widget