மேலும் அறிய

"உங்களுக்கு கால் வலிக்காதா?எனக் கேட்டார்கள்.." : முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சி..

திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை கொடுத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்த தாய்மார்கள் தங்களுக்கு கால் வலிக்கவில்லையா என்று கேட்டதை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்குவதற்காகவும், மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களை வழங்குவதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூருக்கு சென்று இருக்கிறார். நேற்று காலையில் கோவையில் நடந்த நிகழ்வில் முதல்வர் வ.உ.சி மைதானத்தில் ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதேபோல் கோவையில் ரூ.596 கோடி மதிப்பில் 67 புதிய பணிகளுக்கு முதல்வர் நேற்று அடிக்கல் நாட்டினார். கோவையில் இருந்து திருப்பூர் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு அரசு விழாவில் கலந்து கொண்டார். மக்கள் முன் பேசிய அவர் 20 திட்ட பணிகளை திறந்து வைத்தார். 4335 பயனாளிகளுக்கு 55 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நேரடியாக மக்களிடம் திட்டம் சேரும் வகையில் பயனாளிகளை அளித்து முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "திருப்பூர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும். ஆட்சிக்கு வந்த 6 மாதங்களிலேயே நாம் நிறைய பணிகளை செய்து இருக்கிறோம். பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறோம். பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு பணிகளை செய்திருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நமக்கு இன்னும் நான்கரை ஆண்டுகள் உள்ளன. நாம் இன்னும் எவ்வளவு பணிகளை செய்ய உள்ளோம் என்பதை மக்களாகிய நீங்களே புரிந்து கொள்ள வேண்டும்." என்று கூறியிருந்தார். மேலும் நம்பர் 1 முதலமைச்சர் ஆகவேண்டும் என்று விருப்பம் கிடையாது என்பது பற்றி கூறிய ஸ்டாலின், "ஸ்டாலின் நம்பர் 1 முதல்வர் என்று சொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு என்று சொல்லும் நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஒரே விருப்பம்" என்றார்.

மேலும் வந்திருக்கும் அனைவருக்கும் முதல்வர் கையாலேயே நிதிப்பொருட்களை கொடுப்பது குறித்து பேசிய முதல்வர், "இது போன்ற நிகழ்வுகள் காலை 6 மணிக்கு தொடங்கினால் மாலை, இரவு வரை கூட நடக்கும். என் கூடவே இருக்கும் அமைச்சர்கள் இதனால் கடுமையாக டயர்ட் ஆவார்கள். காலையில் இருந்து நின்று கொண்டே இருக்கும் அமைச்சர்கள் எல்லாம் கால்வலி வந்து டயர்ட் ஆகி பிரேக் எடுத்துட்டு வருவாங்க. ஆனால் நான் அப்படி எல்லாம் பிரேக் எடுக்க மாட்டேன். நான் அப்படி இல்லை. கடைசி வரை நான் மேடையில்தான் நிற்பேன். 5000 பேருக்கும் நிதியுதவி கொடுத்து முடிக்கிற வரைக்கும் நான் மேடையில்தான் நிற்பேன். இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அரசின் உதவிகள் மக்கள் எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 10 பேருக்கு கொடுத்துட்டு போய்விட்டால் மிச்சம் உள்ளவர்களுக்கு சமயங்களில் நிதி உதவி கிடைக்கமால் போகலாம். அதனால்தான் நான் நின்று கடைசி வரை எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.

பல தாய்மார்கள் என்னிடம் உரிமையோடு இதைப்பற்றி கேட்டு இருக்கிறார்கள். உங்களுக்கு கால் வலிக்காதா? என்று கேட்டார்கள். காலை 10 மணியில் இருந்து நிற்கிறாயே உனக்கு கால் வலி இல்லையா? என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் அளித்த பதிலில் 'உங்கள் முகத்தை பார்த்தால் எல்லாம் மறந்துவிடும். அதில் உள்ள மகிழ்ச்சியை பார்த்தால் என் வலி எல்லாம் மறைந்துவிடும்' என்று கூறினேன். எனக்கு அது போதும்" என்று திருப்பூரில் நடந்த இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ABP Premium

வீடியோ

AR Rahman controversy | எதிர்த்து நிற்கும் பாலிவுட்!
Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
பொழப்ப பாப்போம்.. சென்னைக்கு ரிட்டர்ன் ஆகும் வெளியூர்வாசிகள்! திணறும் சாலைகள்!
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் வானிலை மாற்றம் !! அடுத்த 48 மணி நேரத்தில் என்ன நடக்கும் ? வானிலை மையம் எச்சரிக்கை
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
ஆழத்தில் மறைந்திருக்கும் அதிசயம்! எவரெஸ்ட் சிகரமே மூழ்கும்! மரியானா அகழியின் சுவாரஸ்யம்
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Study Tips: தேர்வு பயம் இனி வேண்டாம்! 140 ஆண்டு ஜெர்மன் உத்தி: மறதியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்! மாணவர்கள் கவனத்திற்கு!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
Sastra University: சாஸ்த்ரா பல்கலை. விவகாரம்: ஏழைகளுக்கு ஒரு நீதி, கல்வி வியாபாரிகளுக்கு வேறு நீதியா? மார்க்சிஸ்ட் கேள்வி!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
சிங்கிள் சார்ஜில் 146 கி.மீட்டர் மைலேஜ்.. OLA S1 Z இ ஸ்கூட்டரின் விலை, தரம் இதுதான்!
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
Embed widget