“நாளை முதல்வர் மேகா எண்ட்ரி” – கோவையில் மாஸ் கூட்டம்... செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு...
ஜெயின் சமூகத்தினரை கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி, சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் உரையாற்றிய செந்தில் பாலாஜி, கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் திமுக சக்தி வெளிப்பாடு
ஜெயின் சமூகத்தினரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு தொகுதியை பொறுத்தவரை பல முன்னோர்கள் புதியவர்கள் என்று தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்றார். . மக்கள் மீது நம்பிக்கை வைத்து முதலமைச்சர் தன்னை இங்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் அரசு திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்து கூறி மக்களின் அபிமான்யத்தை பெற்று வெற்றி பெறுவேன் என செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியை கேட்டு வாங்கி உள்ளதாக அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, நான் இங்கு தான் நிற்பேன் என்று தனக்கே தெரியாத போது அவருக்கு எப்படி தெரியும் என கேள்வி எழுப்பினார்.
கோவை அதிமுக கோட்டை என தம்பட்டம் அடித்து கொள்ளும் நிலையில் கடந்த 2021 தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்கள். எனவே, அதனை சரி செய்தாலே கோவை அதிமுக கோட்டையென கூறி வருபவர்களுக்கு இந்த தேர்தலில் திமுக கோட்டையாக மாற போவது உறுதி என தெரிவித்தார். செந்தில்பாலாஜி என்ற பெயரிலேயே தவெக வேட்பாளர் ஒருவர் களமிறங்குவதால் குழப்பம் ஏற்படுமோ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பெயரை காட்டிலும் சின்னம் மக்கள் மனதில் பதிந்துள்ளதாக தெரிவித்தார். மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது மக்கள் திமுக பக்கம் நின்றார்கள் என தெள்ள தெளிவாக தெரியவரும் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
நாளை மறுநாள் 2ம் தேதி கொடிசியா மைதானத்தில் கோவையில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் கலந்து கொள்கிறார் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் செந்தில்பாலாஜி அப்போது தெரிவித்தார்.























