பசியோட வேலை செய்றவங்களுக்கே இந்த நிலையா.? - குப்பையில் கொட்டப்பட்ட ‘முதல்வரின் காலை உணவு'...
கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, உட்கொள்ள முடியாத அளவுக்கு தரமற்றதாக இருந்ததால், அந்த உணவை குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

கோவையில், தூய்மை பணியாளருக்கு வழங்கப்பட்ட முதல்வரின் காலை உணவு தரமற்றதாக உண்ண முடியாமல் குப்பை தொட்டியில் தூய்மை பணியாளர்கள் கொட்டும் வீடியோ வைராகி வருகிறது.
தரமற்ற காலை உணவு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதித் முதல்வரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. தரமற்ற காலை உணவு துய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக பல்வேறு பகுதிகளில் குற்ற்ச்சாட்டு எழுந்து வருகிறது. அந்த வகையில் கோவையிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, உட்கொள்ள முடியாத அளவுக்கு தரமற்றதாக இருந்ததால், அந்த உணவை குப்பை தொட்டியில் கொட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.
அதிகாலையிலேயே எழுந்து வந்து நகரைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், பசியுடன் பணியாற்றக் கூடாது என்பதற்காக அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. குப்பைகளைச் சுத்தம் செய்கிறோம் என்பதற்காக, தங்களுக்கு குப்பைகள் போன்ற உணவையே வழங்குவதா என்றும் இதுவா முதல்வர் சொன்ன திட்டம் எனவும் தூய்மை பணியாளர்கள் கேள்வி எழுப்பினர். பசியால் வாடிய போதிலும், அந்த உணவைச் சாப்பிடப் பிடிக்காமல் பணியாளர்கள் குப்பையில் கொட்டிய சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.























