மேலும் அறிய

ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு.. போராடும் விவசாயிகள்..

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள, ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

கோவை மாவட்டம் பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள, ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு 930 கோடி ரூபாய் செலவில் தண்ணீர் எடுத்து செல்ல தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பொள்ளாச்சி பகுதியில் உள்ள விவசாயிகள், இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். 

பி.ஏ.பி என அழைக்கப்படும் பரம்பிக்குளம், ஆழியாறு பாசன திட்டத்தில் ஆழியாறு, பாலாறு படுகைகள் மூலம் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதை தவிர ஆழியாறு, பாலாறு ஆறுகள் மூலம் பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.  பி.ஏ.பி. திட்டத்தில் கேரளாவிற்கு ஆண்டுதோறும் 19.55 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 30.50 டி.எம்.சி. தண்ணீருக்கு பதிலாக சராசரியாக 22 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் கிடைத்து வருகிறது. இதில் சுமார் 3 டி.எம்.சி. குடிநீருக்கு எடுக்கப்படுகிறது. மீதமுள்ள 19 டி.எம்.சி. தண்ணீரை வைத்துக் கொண்டு 4.25 லட்சம் ஏக்கர் பாசனம் செய்யப்படுகிறது. பி.ஏ.பி. திட்டத்தில் நீர் பற்றாக்குறை உள்ள நிலையில் ஒட்டன்சத்திரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ஆழியாறில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு.. போராடும் விவசாயிகள்..

இந்நிலையில் பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்வதை கண்டித்து, விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது எனவும், ஆழியார் அணை நீரை கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட்டு மாற்றுத் திட்டத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர். மேலும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் நலன் கருதி இத்திட்டத்தை கைவிடவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து புதிய ஆயக்கட்டு செயலாளர் செந்தில் கூறுகையில், “இது விவசாயிகள் பிரச்சனை மட்டும் இல்லை. இந்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் பிரச்சனை. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். 

930 கோடி ரூபாய் செலவில் 130 கி.மீ. தூரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுவதற்கு பதிலாக மாற்றுத்திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை செயல்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் இத்திட்டத்தை கைவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget