மேலும் அறிய

Crime: கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு; கோவையில் காவலர் கைது - அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் போது காவல் துறையினர் சோதனை உள்ள இடங்கள் குறித்தும் மாற்று வழியில் செல்வது குறித்தும் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

கோவையில் கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக பந்தயசாலை காவல் நிலைய காவலர் ஸ்ரீதர் மற்றும் வழக்கறிஞர் ஆசிக் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகரில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களுக்கு பிறகு மாநகர காவல் துறையினர் ரவுடி கும்பலை சேர்ந்தவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை கோவை மாநகரில் நூற்றுக்கும் மேற்பட்ட   ரவுடிகள் கைது செய்யபட்டுள்ளனர். இதனிடையே கடந்த 28-ம் தேதி பெங்களூரில் வைத்து சுஜிமோகன், அமர்நாத், பிரவீன், பிரசாந்த், அஸ்வின், பிரவீன் ராஜ், ராஜேஷ் உள்ளிட்ட ஏழு ரவடிகளை போதைபொருட்களுடன் காவல் துறையினர் கைது செய்தனர். அதில் சுஜிமோகன் மற்றும் அஸ்வின் ஆகியோர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பததால், அவ்விருவரையும் ஐந்து நாட்கள் காவலில் எடுத்து காவல் துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணை இன்று முடிவடைந்து இருவரையும் காவல் துறையினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள விரைவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த நிலையில் இருவரிடமும் ஐந்து நாட்கள் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அதில் கோவை பந்தைய சாலை காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் ஸ்ரீதர் மற்றும் சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான ஆஷிக் அலி ஆகிய இருவரும் தங்களுக்கு பல்வேறு வகையில் உதவியதாகவும், கஞ்சா கடத்தலில் ஈடுபடும் போது காவல் துறையினர் சோதனை உள்ள இடங்கள் குறித்தும் மாற்று வழியில் செல்வது குறித்தும் ஆலோசனை வழங்கியதாகவும் கூறியுள்ளனர். அது மட்டுமின்றி குற்ற வழக்குகளிலிருந்து தப்பிக்க ஏதுவாக எவ்வாறு சம்பவத்தில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் சுஜிமோகனுக்கு செல்போனில் சாதாரண அழைப்புக்கு பதிலாக வாட்ஸ் ஆப் மூலம் கால் செய்த நிலையில் அந்த அழைப்புகளை சுஜிமோகன் வேறு செல்போனில் பதிவு செய்திருந்ததால் அதனடிப்படையில் இருவரையும் காவல் துறையினர் கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள இன்றியமையா பண்டங்கள் சிறப்பு தனி நீதிமன்றத்தில் நீதிபதி லோகநாதன் முன்பாக ஆஜர்படுத்தினர். முன்னதாக நீதிமன்றத்திற்கு வரும் போது வழக்கறிஞர் ஆஷிக் காவல் துறையினர் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தன்னை காவல்துறையினர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறி சென்றார். கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியதாக காவலரும், வழக்கறிஞரும் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget