மேலும் அறிய

'புஷ்பா' பட பாணியில் ரகசிய அறை அமைத்து சந்தனக்கட்டைகள் கடத்தல் ; போலீஸ் மடக்கி பிடித்தது எப்படி?

வாகனத்தில் ரகசிய அறை அமைத்து சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோவை வெள்ளலூர் பிரிவில் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாநகர காவல் துறையினர் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த கர்நாடகா பதிவு எண் கொண்ட வாகனம் நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து இந்த வாகனத்தை சந்தேகத்தின் பேரில், காவல் துறையினர் பின் தொடர்ந்து சென்றனர். சேலம் ஆத்தூர் அருகே கர்நாடக எண் கொண்ட அந்த வாகனத்தை மறித்து காவல் துறையினர் சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் ரகசிய அறை அமைத்து  அதில் சந்தன மரக்கட்டைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து வாகனத்தை ஓட்டி வந்த மனோஜ் என்பவரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தில் இருந்து சென்னை வழியாக ஆந்திராவிற்கு சந்தன கட்டைகள்  கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சந்தனகட்டைகளை லாரியுடன் பறிமுதல் செய்த காவல் துறையினர், அதை கோவை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இவற்றை கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிகாரிகள், கேரளாவில் இருந்து லாரி மூலம் சந்தன மரம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சோதனையில்  ஈடுபட்டதாகவும், நிற்காமல் சென்ற வாகனத்தை சேலம் வரை பின் தொடர்ந்து சென்று பறிமுதல் செய்ததாகவும் தெரித்தனர்.


புஷ்பா' பட பாணியில் ரகசிய அறை அமைத்து சந்தனக்கட்டைகள் கடத்தல் ; போலீஸ் மடக்கி பிடித்தது எப்படி?

மொத்தம் 57 மூட்டைகளில் 1051 கிலோ அளவிலான சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக் கட்டைகள் சத்தியமங்கலத்தில் உள்ள வனத்துறை குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட இருப்பதாகவும், அங்கு சந்தன கட்டைகளின் மதிப்பு குறித்து அளவீடு செய்யப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும், இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். காவல் துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட சந்தன கட்டைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த நிலையில், இது தொடர்பாக வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருக்கின்றனர். புஷ்பா திரைப்பட பாணியில் ரகசிய அறை அமைத்து கடத்தி வரப்பட்ட சந்தன கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget