மேலும் அறிய

கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

வெறுமையும், தனிமையும் நிரம்பிய சிறைச்சுவர்களுக்கு 5 கைதிகள், வண்ணம் பூசி கதை சொல்லும் ஓவியங்களாக மாற்றி புதுப்பரிமாணத்தை அளித்து கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.

சிறைச் சாலைகள் வெறும் தண்டனை கூடங்கள் என நினைக்காமல் நன்னடத்தையை வெளிக்காட்டும் வாய்ப்பாக பயன்படுத்தி, பலர் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அந்த வகையில் சிறைச்சாலைகளில் இருந்து பல தலைவர்களும், பட்டதாரிகளும், எழுத்தாளர்களும் உருவாகியுள்ளனர்.  அதேபோல சிறைவாசிகளின் மறுவாழ்விற்காக கைவினை தொழில்களும் சிறை நிர்வாகத்தினால் கற்றுத் தரப்படுவது வழக்கம். அப்படி கோவை மத்திய சிறை அதிகாரிகள் அளித்த திறன் மேம்பாட்டு பயிற்சியினால், சிறைச் சுவர்களை வண்ண ஓவியங்களால் 5 கைதிகள் நிரப்பி கண்களுக்கு விருந்து படைத்துள்ளனர்.

கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

சிறைச்சாலைகள் என்றால் வெறுமையும், தனிமையும், சித்ரவதைகளும்தான் நமது நினைவுக்கு வரும். அதற்கு மாறாக கோவை மத்திய சிறை சுவர்கள் அந்த 5 கைதிகளின் கைவண்ணத்தில் அழகான வண்ண ஓவியங்களாக ஜொலிக்கிறது. சிறைச்சாலை சுவர்கள் ஆயிரக்கணக்கான கதைகளைக் கொண்டது. பல துக்கங்களையும், தன்னிடத்தில் பதுக்கி வைத்துள்ளது. அவற்றுக்கெல்லாம் ஆறுதலாகவும், அதற்கு வண்ணம் பூசி கதை சொல்லும் ஓவியங்களாகவும் மாற்றி புதுப்பரிமாணத்தை அளித்துள்ளனர்.


கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பிர்லா (31), சேலம் கொண்டலாம்பட்டி ஜெகதீசன் (34), சேலம் திப்பம்பட்டி செல்வம் (28),  நாமக்கல் குப்புச்சிப்பாளையம் ராஜ்குமார் (34), ஈரோடு நூருல்லா (23) ஆகிய 5 சிறைக் கைதிகள், 2019-ம் ஆண்டில் சோதனை அடிப்படையில் சுவர்களில் ஓவியங்களை வரையத் தொடங்கினர்.


கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

சிறை அதிகாரிகள் நடத்திய திறன் மேம்பாட்டு வகுப்புகளின் மூலம் அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அவர்களின் ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றை பார்த்த சிறை அதிகாரிகள் உள் சுவர்களில் ஓவியங்களை வரைய அனுமதி அளித்தனர்.


கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

சிறைச்சுவர்களில் இயற்கை மற்றும் தேசபக்தி ஆகிய தலைப்புகளில் ஓவியங்களை வரைந்துள்ளனர். மேலும் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரம் மற்றும் மகாத்மா காந்தி, திருவள்ளுவர் போன்ற ஆளுமைகளின் உருவப்படங்களை தங்களது கைவண்ணத்தில் ஓவியமாக சுவர்களில் வரைந்துள்ளனர். எழில்மிகு இயற்கை காட்சிகள், தண்ணீரில் பிரதிபலிக்கும் மர நிழல், கிதார் போல வரையப்பட்ட கட்டிடம், சிறைக்குச் சென்று பட்டதாரியாகத் திரும்பும் இளைஞர், யானையின் உடலுக்குள் மறைந்திருக்கும் விலங்குகள், மரங்களையே அதன் கொம்பாகக் கொண்ட மான் என கற்பனைத் திறனைக் காட்சிகளாக படைத்துள்ளனர். சட்டத்திலிருந்து வெளிவருவது போலான 3 டி புலி ஓவியம் வரைந்து தங்களது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.


கைதிகளின் கைவண்ணத்தில் ஜொலிக்கும் ஓவியங்கள்.. ஆச்சரியக்கதைகள் சொல்லும் கோவை மத்திய சிறை சுவர்கள்..!

இது குறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், “இயற்கைக் காட்சிகள் நிறைந்த எழில்மிகு தோற்றத்துடன் வெள்ளைச் சுவர்கள் அற்புதமான சுவரோவியங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களால் சுவர்களின் அழகு பன்மடங்கு பெருகி உள்ளது. வெற்றுச் சுவர்களைப் பார்ப்பது ஒருவித சலிப்பை உருவாக்கி இருந்தது. இதை இவர்களின் ஓவியம் மாற்றி உள்ளது. நேர்மறையான சூழலை உருவாக்கி உள்ளது. இவர்களின் இத்தகைய முயற்சி நேர்மறையான சிந்தனைகளை வளர்ப்பதற்கான நல்ல முயற்சியாகும். இது போன்ற செயல்கள் பிற கைதிகளுக்கு நல்போதனை தரும். அவர்கள் தங்களது தண்டனைக் காலம் கழிந்து நன்னடத்தையை பின்பற்றி வாழ வழிவகுக்கும் என்று நம்பலாம்” என அவர்கள் தெரிவித்தனர்.

கைதிகளின் கைவண்ணத்தில் வண்ண ஓவியங்களால் ஜொலிக்கும் கோவை மத்திய சிறைச்சுவர்கள்! - புகைப்பட ஆல்பம்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
கோவையில் நாளை (30-05-2026 ) எங்கெல்லாம் மின்தடை இருக்கும்? - லிஸ்டில் செக் பண்ணிக்கோங்க
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
நூற்றுக்கணக்கான தேனீக்கள் தாக்குதல்… ஆனாலும் தேனை விடாது ருசித்த கில்லாடி கரடி...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
“விஜய் வந்தது மகிழ்ச்சி” – அரசியல் மாற்றம் குறித்து நடிகர் சிவக்குமார் அதிரடி கருத்து...
coimbatore power cut: கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
கோவையில் நாளை (29-05-2026) மின்தடை செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் வெளியானது
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
வெள்ளை அறிக்கை, சட்டசபை, பட்ஜெட்.. வேகமெடுக்கும் தமிழக அரசு - சிஎம் விஜயின் சர்ப்ரைஸ் இருக்கா?
TN Weather Update: வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
வெளுக்க தயார்..! 14 மாவட்டங்களில் கனமழை அலெர்ட், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் அதிரடித் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
பருவமழை தொடங்குவதில் சிக்கலா? காத்திருக்கும் திருப்பம் - வானிலை மையம் சொன்ன முழு விவரம்!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
Tata Punch CNG: 31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
31KM மைலேஜ் அளிக்கும் டாடா எஸ்யுவி - 5 ஸ்டார் ரேட்டிங், ரூ.9,007 EMI திட்டம் - முழு விவரம் இதோ
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Bengaluru Pugazhendi: கலையப்போகும் அடுத்த அதிமுக.. தவெகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி!
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Embed widget