மேலும் அறிய

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தூய்மை பணியாளர் - வீடியோ வைரல் ஆனதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை அடைப்பை சுத்தம் செய்ய துப்புரவு தொழிலாளியை மேற்பார்வையாளர் கட்டாயப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வபுரம் 78வது வார்டு பகுதியில் ஒப்பந்த துப்புறவு பணியாளர்களாக சுப்பிரமணி, தருமன், செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் பணியாற்றி வருகின்றனர். அங்குள்ள ஆலமரமேடு என்ற பகுதியில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் கடந்த 19 ஆம் தேதியன்று மூவரையும் சாக்கடை அடைப்பை நீக்குமாறு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராம் மற்றும் மேற்பார்வையாளர் மாணிக்கம் ஆகியோர் கூறியுள்ளனர். சாக்கடைக்கு உள்ளே இறங்காமல் அடைப்பை நீக்க முடியாது என பணியாளர்கள் கூறிய நிலையில், மேற்பார்வையாளர் மாணிக்கம் ’அடைப்பை நீக்கத் தான் உங்களை பணியில் வைத்துள்ளோம், இறங்கி சுத்தம் செய்யுங்கள்’ என உத்தரவிட்டுள்ளார். 

சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தூய்மை பணியாளர் - வீடியோ வைரல் ஆனதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்
சுப்பிரமணி

இதையடுத்து சுப்பிரமணி உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடைக்குள் இறங்கி தனது வெறும் கைகளால் குப்பைகளை அகற்றி, அடைப்பை நீக்கி உள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதையடுத்து சுப்பிரமணி உள்ளிட்ட மூவரையும், தங்களது விருப்பத்தின் பேரில் தான் சாக்கடைக்குள் இறங்கியதாக கையெழுத்திட்டு தருமாறு மாணிக்கம் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணியாளரை சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்திய துப்புரவு மேற்பார்வையாளர் மாணிக்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து துப்புரவு பணியாளர் சுப்பிரமணி கூறுகையில், ”தர்மன், செந்தில் குமார் மற்றும் நான் சாக்கடை அடைப்பு எடுக்க சென்றோம். அங்கு இருந்த சூழ்நிலை காரணமாக சாக்கடைக்குள் இறங்கமால் அடைப்பை எடுக்க முடியாது எனச் சொன்னோம். அதற்கு தான் உங்களை அழைத்து வந்துள்ளோம் என மாணிக்கம் சொன்னார். தானாக தான் சுத்தம் செய்ததாக ஒரு வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடுமாறு துன்புறுத்தினார்” என அவர் தெரிவித்தார்.


சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்பட்ட தூய்மை பணியாளர் - வீடியோ வைரல் ஆனதால் மேற்பார்வையாளர் சஸ்பெண்ட்

இந்நிலையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி சுப்ரமணியை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடைக்குள் இறங்கி கையால் சுத்தம் செய்ய சொன்ன துப்புரவு மேற்பார்வையாளர் மாணிக்கம் என்பவரை தற்காலிக பணி நீக்கம் செய்து கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி நகர் நல அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget