மேலும் அறிய

'பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமைகளை மீட்டுள்ளோம். இது அமைதி போராட்டம்’ - அற்புதம்மாள்

"பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய வேலை சாத்தியப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது"

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே தனது விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களை சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்து வருகிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேரறிவாளன் நன்றி தெரிவித்துள்ளார். 


பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமைகளை மீட்டுள்ளோம். இது அமைதி போராட்டம்’ - அற்புதம்மாள்

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்திற்கு பேரறிவாளனும், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் வருகை புரிந்தனர். அவர்களுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, விசிக உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பெரியார் படிப்பகம் முன்புள்ள பெரியார் சிலைக்கு பேரறிவாளன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் படிப்பகத்தில் அவருக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அற்புதம்மாள் கேக் வெட்டி பேரறிவாளனுக்கு ஊட்டி மகிழ்ந்தார். 


பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமைகளை மீட்டுள்ளோம். இது அமைதி போராட்டம்’ - அற்புதம்மாள்

இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அற்புதம்மாள், ”இது 31 ஆண்டு கால போராட்டம். பேரறிவாளன் விடுதலை என்று கூறுவதை விட மாநில உரிமைகளை மீட்டுள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய வேலை சாத்தியப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போராட்டத்திற்கு பலரும் உளப்பூர்வமாக ஒத்துழைப்பு தந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளோம். இது ஒரு அமைதி போராட்டம் என்றுதான் கூற வேண்டும். யாரையும் எதிர்க்கவில்லை. நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தினால், பேரறிவாளன் சட்டத்தின் மூலம் விடுதலை ஆகியுள்ளார். அனைவரும் அமைதி வழியில் அனைத்தையும் முன்னெடுப்போம்” எனத் தெரிவித்தார். 

பின்னர் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், ”இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை பெற்று 31 ஆண்டுகளுக்கு பின் விடுதலை பெற்ற பேரறிவாளன் மற்றும் அவருக்காக 31 ஆண்டு காலம் உழைத்த அவரது தாயாருக்கும் கோவைக்கு வருகை புரிந்துள்ளனர். மாநில உரிமைகளுக்கு விடிவு தேடி தந்தார்கள். பேரறிவாளன் விடுதலைக்காக அனைத்துக் கட்சி போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் பாடுபடுவோம்” எனத் தெரிவித்தார். 


பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமைகளை மீட்டுள்ளோம். இது அமைதி போராட்டம்’ - அற்புதம்மாள்

அதனை தொடர்ந்து பேசிய பேரறிவாளன், ”31 ஆண்டு கால நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. அதற்காக கு.ராமகிருட்டிணன் போராட்டங்களை நடத்தியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் உதவியாக இருந்துள்ளனர். எனது விடுதலைக்காக உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இங்கு வந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Embed widget