மேலும் அறிய

கோவை : நீதிமன்ற விசாரணைக்கு வந்த இருவருக்கு கத்திக்குத்து ; பழிக்கு பழியாக கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது..!

வினோத்குமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது.

கோவை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த இருவரை சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி சென்று கத்தியால் குத்திய 10 பேர் கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை அம்மன் குளம் பகுதியில் கடந்த 2020 ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக, வினோத் குமார் என்பவர் கத்தியால் குத்தி  கொலைச் செய்யப்பட்டார். இந்த  கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த  விஜயகுமார், கண்ணன், ஹரிகரன், சக்திவேல் ஆகியோரை ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம்வழக்கு விசாரணைக்கு ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்திற்கு வெளியே வந்தபோது, கொலை செய்யப்பட்ட வினோத்குமாரின் தந்தை கருப்பசாமி, அண்ணன் பிரவீன் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து மறித்துள்ளனர்.


கோவை : நீதிமன்ற விசாரணைக்கு வந்த இருவருக்கு கத்திக்குத்து ; பழிக்கு பழியாக கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது..!

விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரும் தப்பியோட, சாலையில் விரட்டி சென்ற அக்கும்பல் கத்தியால் குத்தியுள்ளது. இதில் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோருக்கு உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை முயற்சி தொடர்பாக பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.


கோவை : நீதிமன்ற விசாரணைக்கு வந்த இருவருக்கு கத்திக்குத்து ; பழிக்கு பழியாக கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பல் கைது..!

காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வினோத்குமார் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கருப்பசாமி  மற்றும் பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகிய 10 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி, இரு சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 10 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் , முறையற்ற தடுப்பு, தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த 12 மணிநேரத்திற்குள் காவல் துறையினர் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இருவரை கும்பல் ஆயுதங்களுடன் விரட்டி சென்று தாக்குவதும், பின்னர் இளைஞர்கள் திரும்பும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
Coolie Update: ஜூலையில் கூலி ஷூட்டிங்! தலைவர் போட்டோவுடன் தாறுமாறு அப்டேட் கொடுத்த லோகேஷ்!
July 2024 Rasi Palan: நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
நன்மைகள் நிகழும் மாதமாக ஜூலை இருக்கும்! எந்த ராசிக்கு யோகம்? மாத ராசி பலன்! இதோ!
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
NEET Re Exam: ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறதா நீட் மறுதேர்வு முடிவுகள்?: காண்பது எப்படி?
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
CM Stalin: நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் கூடுதலாக ஊக்கத்தொகை: முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
Embed widget