கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் கோவையில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின்தடை ஏற்படும். அவ்வாறு நாளை (10.7.2026) கோவை மாவட்டத்தில் உள்ள 3 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.
மின்தடை ஏற்ப்படவுள்ள இடங்கள் :
சோமனுார் துணை மின் நிலையம்: சோமனுார், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், பரமசிவன் பாளையம், கணியூர் (ஒரு பகுதி).
கருமத்தம்பட்டி துணை மின் நிலையம்: ராயர்பாளையம், கருமத்தம்பட்டி நால்ரோடு, தண்ணீர் பந்தல், காளிபாளையம் துணை மின் நிலையம், காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் (ஒரு பகுதி).
சோமையம்பாளையம் துணைமின் நிலையம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி. நகர், லுானா நகர், கணுவாய், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்டீரியல் பகுதி, கே.என்.ஜி. புதுார், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி. நகர், நமீதா கார்டன், அப்துல்கலாம் காலனி, மேகலாமணி ரோடு.
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
"விஜய் அங்கிள் ஒரு REQUEST" பள்ளி மழலைகள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
ட்ரெண்டிங் செய்திகள்






















