மேலும் அறிய

கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இதுவரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இவ்வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், இவ்வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறிய சயன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இதையடுத்து  ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி,  சதீசன், பிஜின் குட்டி ஆகிய 6 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி இரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியங்களை அழித்ததாக கனகராஜின் சகோதாரர் தனபால் (44) மற்றும் அவரது உறவினர் ரமேஷ் (34) ஆகியோரை கடந்த மாதம் 25 ம் தேதி நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் கூடலூர் கிளைச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.


கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு பின்னர் முதல் முறையாக இருவர் கைது செய்யப்பட்டனர். இருவர் மீதும் சாட்சியங்களை மறைத்தல், சாட்சியங்களை அழித்தல், சாட்சிகளை தடுத்தல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் காவல் துறையினர் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.


கோடநாடு வழக்கில் 3 செல்போன்கள்... 6 சிம் கார்டுகள் பறிமுதல்: நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்!

இதனிடையே கடந்த 2 ம் தேதி தனபால் மற்றும் ரமேஷ் இருவரும் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது இருவருக்கும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதாகவும், இருவரிடமும் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறி அரசு தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுவரை கனகராஜின் வீட்டில் இருந்து 3 செல்போன்கள், 6 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், இவ்வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டி இருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சஞ்சய் பாபா இருவரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai BJP | வாயை விட்ட அண்ணாமலை.. off செய்த அமித்ஷா! ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி! | ADMKதலைமை ஆசிரியை அராஜகம்?ஆசிரியர்களுக்கு மன உளைச்சல்! போராட்டத்தில் குதித்த மாணவிகள்Chengalpattu Police Chasing | 15 கி.மீ தூரத்திற்கு லாரியில் தொங்கிய காவலர் சினிமா பாணியில் கொள்ளைTVK Vijay Next Plan | OPERATION வட மாவட்டம்! தவெகவின் அடுத்த மாநாடு! விஜய்யின் ப்ளான் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL MI Vs DC: சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
சேன்ட்னர், பும்ரா அபாரம்; டெல்லியை பொட்டலம் கட்டிய மும்பை; ப்ளே ஆஃப்-க்கு தகுதி
Afghan Vs India: இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ஆப்கானிஸ்தான்; சீனா, பாகிஸ்தானுடன் கைகோர்ப்பு - நடந்தது என்ன.?
Jyoti Malhotra's Chat: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
“என்ன கல்யாணம் பண்ணிக்கோ“ பாக். உளவுத்துறை அதிகாரியுடன் லவ்ஸ் - சிக்கிய ஜோதியின் Chat
Ryo Tatsuki Prediction: “ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
“ஜூலையில் பேரழிவு“ ஜப்பானின் புதிய பாபா வங்கா சொன்னது என்ன.? பீதியில் மக்கள்
Stalin Reply to EPS: “ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
“ஒரே ரெய்டில் ‘புலிகேசி‘யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற‘ பழனிசாமி“ பதிலுக்கு வெளுத்த ஸ்டாலின்
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
TN Govt: வழங்கப்படாத கல்வி நிதி.. நீதிமன்ற கதவை தட்டிய தமிழக அரசு! என்னென்ன கோரிக்கைகள்?
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ravi Mohan Aarti Divorce: மாசம் ரூபாய் 40 லட்சம் வேணும்.. நடிகர் ரவி மோகனிடம் ஆர்த்தி கேட்ட ஜீவனாம்சம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Ramadoss: அன்புமணியுடன் மனக்கசப்பா? பாமக தொண்டர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பதில்!
Embed widget