மேலும் அறிய

கோவையில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு: காவல் துறையினர் விசாரணை

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பூங்காவிற்குள் பதித்து வைத்திருக்கும் மின்சார ஒயரினை தெரியாமல் மிதித்துள்ளான். அப்போது சிறுவன் லஷ்மன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்துள்ளான்.

கோவையில் தனியார் அப்பார்மெண்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

கோவை வடவள்ளி உள்ள சான்ஸ்ரே என்ற அபார்மெண்டில் வசித்து வருபவர்  பிரதீஷ். இவரது மனைவி சுகன்யா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களது 11 வயது மகன் லஷ்மன், அப்பகுதியில் உள்ள  தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் லஷ்மன் நேற்று இரவு அபார்மெண்டில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக பூங்காவிற்குள் பதித்து வைத்திருக்கும் மின்சார ஒயரினை தெரியாமல் மிதித்துள்ளான். அப்போது சிறுவன் லஷ்மன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்துள்ளான். 

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் சிறுவன் லஷ்மனை மீட்டு, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் லஷ்மன், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து லஷ்மன் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து லஷ்மனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வடவள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


கோவையில் மின்சாரம் தாக்கி 11 வயது சிறுவன் உயிரிழப்பு: காவல் துறையினர் விசாரணை

காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அபார்மெண்டில் உள்ள பூங்காவில் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட மின்சார ஒயரை அந்த அபார்மெண்டில் உள்ள பூங்கா பராமரிப்பாளர் வெளியே எடுத்ததாகவும், மீண்டும் அந்த ஒயரை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு விட்டு சென்றதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த லஷ்மன் எதிர்பாராத விதமாக மின்சார ஒயரை மிதித்ததால் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.  

இது குறித்து சிறுவன் லஷ்மனின் தாயார் சுகன்யா கூறுகையில், “அப்பார்மெண்ட் பூங்காவில் லஷ்மன் ஷாக் அடித்து இறந்து விட்டான். இதற்கு பராமரிப்பு சரியில்லாததே காரணம். அபார்மெண்ட் அசோசியேசன் தலையீடு காரணமாக காவல் துறையினர் தற்போது வரை வழக்குப் பதிவு செய்யாமல் உள்ளனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்து, லஷ்மன் உடலை எங்களிடம் கொடுங்கள்” எனத் தெரிவித்தார். பூங்காவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget