மேலும் அறிய

உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்! சினிமா உதவி இயக்குனரை சொத்துக்காக ஏமாற்றிய அக்கா!

தந்தைக்கு சொந்தமான 33 குழி(4608)சதுர அடி இடத்தை தனது இறப்பு சான்றிதழை வைத்து அவரது பெயருக்கு கடந்த 2019ல் மாற்றிக் கொண்டதாக கூறி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்.

உயிருடன் இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் பெற்று சொத்தை தனது பெயருக்கு மாற்றிய சகோதரி. பாதுகாப்பு கேட்டு தனது இறப்புச் சான்றிதழ் நகலுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த திரைப்பட இயக்குனர்.
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட செருமங்கலம் கக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த வீராசாமி சிந்தாமணியம்மாள் தம்பதியினருக்கு நான்கு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மகன் சஞ்சீவி என்கிற தவசுமணி(48)உதவி இயக்குனராக இருந்து வருகிறார். இவர் தனது 28 வது வயதில் சென்னை சென்று அங்கு தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில் தற்போது மனசுக்குள்ள மகராசா என்கிற படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அக்கா செய்த மோசடி:

இந்த நிலையில் இவர் தன் நான்காவது அக்காவான மல்லி என்பவர் தனது தந்தைக்கு சொந்தமான 33 குழி(4608)சதுர அடி இடத்தை, தனது இறப்பு சான்றிதழை வைத்து அவரது பெயருக்கு கடந்த 2019ல் மாற்றிக் கொண்டதாக கூறி தனது இறப்பு சான்றிதழ் நகல் மற்றும் சம்பந்தப்பட்ட பத்திரத்தின் நகல் ஆகியவற்றுடன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார்.

உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்! சினிமா உதவி இயக்குனரை சொத்துக்காக ஏமாற்றிய அக்கா!
 

போலி இறப்புச் சான்றிதழ்:

 
அந்த புகார் மனுவில் தனது நான்காவது அக்கா போதுமல்லி என்பவரை ஒரத்தநாடு வட்டம் குளமங்கலத்தில் திருமணம் செய்து கொடுத்த நிலையில் தனது மூன்று மகன்களுடன் செருமங்கலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்து தங்கியதாகவும் தொழில் சார்ந்து நான் அடிக்கடி வெளியூர் செல்வதை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு மோசடி செய்ய வேண்டும் என்கிற உள்நோக்கத்துடன் 11.06.1998 அன்று தான் இறந்து விட்டதாக மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்து இறப்பு சான்றிதழ் பெற்றுள்ளனர்.
 
அந்த இறப்பு சான்றிதழில் அதனை பதிவு செய்த செய்தி தேதி 16.03.1998 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த போலியானதும் மோசடியாகவும் பெறப்பட்ட இறப்புச் சான்றிதழை பயன்படுத்திக்கொண்டு நான் உயிரோடு இருக்கும்போதே எனக்கே தெரியாமல் கடந்த 15.11.2019 அன்று செருமங்கலத்தைச் சேர்ந்த எம்.கே சந்திரசேகரன் என்பவர் பெயரால் வாங்கப்பட்ட பத்து ரூபாய்க்கான முத்திரைத்தாளில் எங்கள் சொத்தை மற்ற மூன்று சகோதரிகளும் சேர்ந்து எழுதிக் கொடுத்ததாக பத்திரமும் தயார் செய்து வைத்துள்ளார்.

உயிருடன் இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்! சினிமா உதவி இயக்குனரை சொத்துக்காக ஏமாற்றிய அக்கா!
 
அந்த மோசடியான பத்திரத்தில் நான் உயிரோடு இருக்கும்போது அதனை மறைத்து பிழைப்புக்காக சென்னை சென்று இருந்த போது லாரியில் அடிபட்டு இறந்து விட்டதாகவும், பிணம் அழகிய நிலையில் என்னை அங்கேயே அடக்கம் செய்துவிட்டதாகவும் அதனால் மற்ற மூன்று சகோதரிகளும் சேர்ந்து எழுதி கொடுத்ததாகவும் உள்ளது. அதன் பின் கடந்த 2004 ஆம் ஆண்டு எனது தாயார் சிந்தாமணி அம்மாள் தனது மகள் போதுமல்லிக்கு எழுதி கொடுத்ததை போன்று மோசடியான எண்ணத்துடன் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது.
 
எனது தாயார் கடந்த 16.05.2022 அன்று உடல்நலம் கொண்டு இறந்து விட்டார். அதற்கு நான் உடனிருந்து ஈம கிரியைகள் செய்து முடித்தேன்.இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டு இறந்தவர் 2004 ஆம் ஆண்டில் பத்திரம் எழுதி கைரேகை வைத்து கொடுத்துள்ளதாக உள்ளது. மேலும் பூர்வீக இடத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள பொருட்களை போதுமல்லியின் மகன்கள் திருடி சென்றதாகவும் அவர்களால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும்,

பாதுகாப்பு வேண்டும்:

கடந்த 23.11.2023 அன்று வடுவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை எடுத்து இரு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இனிமேல் எனக்கு தொல்லை கொடுக்க மாட்டேன் என்று அவர்கள் எழுதிக் கொடுத்துச் சென்ற நிலையில் அடுத்த நாளே போதுமல்லியின் மகன் இளையராஜா அடையாளம் தெரியாத இரண்டு நபர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இது குறித்தும் கடந்த 25.11.2023 அன்று மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் எனவே போதுமல்லி மற்றும் அவரது மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அவர் புகார் மனு கொடுத்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
மதுரை த.வெ.க பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. மாவட்ட செயலாளர் மீது பகீர் குற்றச்சாட்டு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
பிரதமர் மோடி வருகை: புதுச்சேரியில் ட்ரோன்கள் பறக்க தடை - மார்ச் 1-ல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!
ஓபிஎஸ்-ன் 'அறிவாலய பக்தி': ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் விமர்சனம் !
ஓபிஎஸ்-ன் 'அறிவாலய பக்தி': ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்வார் எனவும் விமர்சனம் !
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
Coimbatore Power Shutdown: கோவையில் நாளை(28-02-2026) 7 மணி நேர மின் தடை! இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! முன்கூட்டியே செய்ய வேண்டியது என்ன?
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
மனைவியை ஏமாற்றிய விஜய் தியாகியா ! குமட்டலை ஏற்படுத்தும் தவெக ஆதரவாளர்களின் சோசியல் மீடியா பதிவுகள்
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
இசையமைக்க மறுத்த இளையராஜா.. காலில் விழுந்த பார்த்திபன் - நடந்தது என்ன?
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Embed widget