மேலும் அறிய

சென்னையில் திடீரென முளைத்த "zero is good" அறிவிப்பு பலகைகள்..வாகன ஓட்டிகள் கவனத்திற்கு!

Zero Is Good : சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ள, Zero Is Good அறிவிப்பு பலகைகள் எதற்காக வைக்கப்பட்டுள்ளது

கடந்த  இரண்டு நாட்களாக சென்னை முழுவதும் பல்வேறு சாலைகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூதன முறையில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பு பலகையில் ஜீரோ இஸ் குட் ( Zero is Good ) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த நூதன அறிவிப்பு பலகைகளை, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.


சென்னையில் திடீரென முளைத்த

Zero is Good

மஞ்சள் நிற பலரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த அறிவிப்பு பலகை பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே போன்று ஒரு சில ஆட்டோக்கள் பின்புறத்திலும் இதே வாசகம் பதியப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து நிறுத்தத்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் இடையே கவனத்தைப் பெற்று வருகிறது. பலரும் இந்த வாசகம் எதற்கு வைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் என்ன விழிப்புணர்வை போக்குவரத்து போலீசார் ஏற்படுத்தப்பட உள்ளனர் என குழும்பி இருக்கின்றனர்.  நாம் இந்த செய்தி தொகுப்பில், வாகன ஓட்டிகள் என்ன நினைக்கிறார்கள், பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் எதற்காக இந்த பதாகை வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

 


சென்னையில் திடீரென முளைத்த


அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில்  விபத்துக்கள் என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. வளர்ந்த நாடுகளை பொறுத்தவரை சாலை விபத்துக்கள் என்பது குறைவாகவே இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணம், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றுவதுதான் என பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

 

நூதன முறையில்...

 

அந்த வகையில் இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்துக்கள் குறைக்க, சாலை விதிகளை பின்பற்ற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துகளை குறைக்க, சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவப்பொழுது நூதன முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

 


சென்னையில் திடீரென முளைத்த

சாலையில் பல இடங்களில் திடீரென ஒரு குறிப்பிட்ட வாசகங்களை கொண்ட, பேனர்கள், அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். சில நாட்கள் கழித்து அந்த அறிவிப்பு எதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இது போன்ற சென்னை மாநகரப் போக்குவரத்து போலீசார் நூதன முறையில், விழிப்புணர்வு ஏற்படுத்துவது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே வரவேற்பை பெற்று வருகிறது.

 

 மக்கள் கூறுவது என்ன ?


இது குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவிக்கையில், சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். மேலும் ஒரு சிலர் விபத்திலா சென்னை மாநகரை குறிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஒரு சிலர் u Turn விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் இது குறித்த அறிவிப்பாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர். 

 

 போலீசார் கூறுவது என்ன ?

சமூக வலைதளத்தில் சிலர் , மாநகராட்சி போக்குவரத்து காவல்துறையை விமர்சனமும் செய்து இருக்கின்றனர். சாலையை சரி செய்ய வேண்டும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வாகனங்களை கண்காணிக்க வேண்டும் இதையெல்லாம் செய்தால் நல்லது எனவும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றனர்.


சென்னையில் திடீரென முளைத்த

 

இந்த விழிப்புணர்வு பலகைகள் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்து போக்குவரத்து துறை காவலர்களிடம் கேட்ட பொழுது : " விரைவில் இந்த விழிப்புணர்வு அறிவிப்புகள் எதற்காக வைக்கப்பட்டது என்பது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் " என தெரிவிக்கின்றன

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Breaking News LIVE 28th Sep 2024:
"மாநில உரிமைகளை பெற அண்ணா வழியில், கலைஞர் வழியில், அயராது உழைப்போம்" : முதல்வர் ஸ்டாலின்
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னாது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
"பெரு நிறுவனங்களுக்கு நாமதான் முகவரி" பெருமிதத்துடன் முதல்வர் ஸ்டாலின் சொன்ன அந்த வார்த்தை!
Salem Leopard: சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
சேலம் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை உயிரிழப்பு
Actor Sathyaraj:
"மதவாதிகளுக்கு நாங்க பிரச்னை இல்லை.! சேகர்பாபுதான் பிரச்னை ": நடிகர் சத்யராஜ் அதிரடி.!
Embed widget