மேலும் அறிய

அதிர்ச்சி சம்பவம் ; கணவர் கண் முன்னே பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் !!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒப்பந்த அடிப்படையில் பணி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்ற பல தனியார் நிறுவனங்களில், அசாம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில், அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வேலைக்குச் சேர்ந்தனர். திருநெல்வேலியில் வசிக்கும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் (27) என்பவர், கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் பெற்றுக் கொண்டு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குச் சேர்த்துள்ளார்.

பணம் வாங்கி விட்டேன் என மிரட்டல்

போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் குறைவாக இருந்ததாலும் அந்த தம்பதியினர் வேலையில் இருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரும் கேரள மாநிலத்திற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, அரசர்குளத்தில் இருந்து ஆட்டோவில் திருநெல்வேலிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களின் செல்போனில் தொடர்பு கொண்ட முகமது ஹுசைன், நீங்கள் வேலையில் இருந்து விலகக் கூடாது. நீங்கள் தொடர்ந்து வேலை செய்வீர்கள் என்று கூறி நான் பணம் வாங்கி விட்டேன் என்று மிரட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய முகமது ஹுசைன், பைக்கில் இரண்டு இளம் சிறார்களை உடன் அழைத்துக் கொண்டு சிவந்திபட்டி பகுதியில் ஆட்டோவை வழிமறிக்க காத்திருந்தார். ஆட்டோ அங்குச் சென்றதும், தம்பதியினர் கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக ஆட்டோ டிரைவரிடம் பொய்ச் சொல்லி இருவரையும் அங்கிருந்து வலுக் கட்டாயமாக அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கூட்டு பாலியல் பலாத்காரம்

அங்கு , அந்தப் பெண்ணின் கணவரை முகமது ஹுசைன் உள்ளிட்ட 3 பேரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். பிறகு அவருடைய கண்முன்னே, அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பல மணி நேரத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட தம்பதியினரை காட்டுப் பகுதியில் விட்டு விட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தச் கொடூரச் செயலில் ஈடுபட்ட 3 நபர்களையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவர் கண் முன்னே அசாம் பெண் ஒருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட இந்தச் சம்பவம் தூத்துக்குடி வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
15 ஆண்டுகளுக்குப் பின் ஓகே சொன்ன ரயில்வே வாரியம்! இனி சென்னை மெட்ரோ வசமாகும் பறக்கும் ரயில்!
சீசன் டிக்கெட் வைச்சிருக்கீங்களா? இனி இந்த பிரச்சனை வராது! தெற்கு ரயில்வேயின் அதிரடி திட்டம்!
சீசன் டிக்கெட் வைச்சிருக்கீங்களா? இனி இந்த பிரச்சனை வராது! தெற்கு ரயில்வேயின் அதிரடி திட்டம்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரிக்கு படகுப் போக்குவரத்து! - வெளியான மெகா பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்... GCC போட்ட முக்கிய பிளான்!
டிராஃபிக் பிரச்சனைக்கு குட் பை! சென்னையில் புதிதாக வரப்போகும் மாற்றம்! GCC முக்கிய பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget